டிசிஎஸ் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும் கிடையாது!

 

 டிசிஎஸ் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும் கிடையாது!

டிசிஎஸ் நிறுவன நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜேஷ் கோபிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.

2019-20ஆம் ஆண்டுக்கான நான்காவது காலாண்டில் டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் 8,049 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இது குறித்து டிசிஎஸ் நிறுவன நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜேஷ் கோபிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். 

tt

அதில், ” கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு பெருமளவில் லாபத்தை ஈட்டியுள்ளது. ஆனாலும் கொரோனா காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகள் நெருக்கடியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் பணியாளர்களை வேலையை விட்டு அனுப்பும் நோக்கம் இல்லை. அதே சமயம்  ஊதிய உயர்வும் கிடையாது” என்று கூறினார். 

tt

தொடர்ந்து பேசிய அவர், “காலேஜ் கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வான  40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்” என்று உறுதியளித்துள்ளார்.