டிக் டோக் வீடியோவிலும் சாதி : நண்பனை கொலை செய்த இளைஞர்; திருத்தணியில் பரபரப்பு!

 

டிக் டோக் வீடியோவிலும் சாதி : நண்பனை கொலை செய்த இளைஞர்; திருத்தணியில் பரபரப்பு!

டிக் டோக்  வீடியோ காரணமாக இளைஞர் ஒருவர் தன் நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி: டிக் டோக்  வீடியோ காரணமாக இளைஞர் ஒருவர் தன் நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தாழவேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் விஜய் மற்றும் வெங்கட்ராமன். நண்பர்களான  விஜய்யும், வெங்கட்ராமனும் டிக் டோக் ஆப்பில் வீடியோ பதிவு செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். 

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சமூக மக்களை வெங்கட்ராமன் இழிவாக பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை விஜய் சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக தெரிகிறது.

இதை பார்த்த குறிப்பிட்ட சாதியை சேர்ந்த மக்கள், வெங்கட்ராமனை கண்டித்ததோடு வெங்கட்ராமனை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வெங்கட்ராமன், விஜய் ஆகிய இருவரும் தலைமறைவாகினர்.

MURDER TTN

இதனை  தொடர்ந்து வெங்கட்ராமனின் தந்தையை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதை அறிந்து கொண்ட வெங்கட்ராமன் தனது வீடியோவை வெளியிட்ட நண்பன் விஜய் மீது ஆத்திரம் கொண்டுள்ளார். இதனால் மது அருந்தி கொண்டிருந்தபோது விஜய்யை கட்டையால் தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது.

அதன் பின்னர் விஜய் இறந்ததை உறுதி செய்த  வெங்கட்ராமன் திருத்தணி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த திருத்தணி காவல்துறையினர் வெங்கட்ராமனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.