டிக் டோக் பிரபலம் சுட்டுக்கொலை: வீடியோவால் நடந்த விபரீதம்!?

 

டிக் டோக்  பிரபலம் சுட்டுக்கொலை: வீடியோவால் நடந்த விபரீதம்!?

டிக் டோக்  பிரபலம் ஒருவர் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி:  டிக் டோக்  பிரபலம் ஒருவர் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டிக் டோக் ஆப்பில்  பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நடித்து அதனை அப்லோட் செய்வது இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்காக உள்ளது. பாடல்களுக்கு ஏற்ப வாயசைப்பது, நடனம் ஆடுவது, குறிப்பிட்ட வசனத்தைப் பேசுவது  என இளைஞர்கள்  முதல் பெரியவர்கள் வரை டிக் டோக்  ஆப்பில்  நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில்,  பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, டிக் டோக்கிற்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். மேலும், ஆபாசமான வீடியோக்கள் பலவும் இதில் உலாவுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

tik tok

பெண்கள் பதிவிடும் வீடியோக்களை சிலர் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவதால், பல பெண்கள் தற்கொலை கொள்வதால், சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. 

இந்நிலையில் டிக் டோக்  வீடியோவால் உச்சக்கட்டமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 
டிக்டோக்கில் மிகவும் பிரபலமாக வலம்வருபவர் மொஹித். ஜிம் டிரைனரான இவர் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து  வந்துள்ளார். இதனால் இவரை ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வந்துள்ளனர். 

tik tok

நேற்று மாலை ஜிம் அருகே உள்ள  கடையில் நின்றிருந்த மொஹித்தை  மர்மநபர்கள் மூவர் சுட்டுக் கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பந்தமான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. அதில் கொலையாளிகள் ஹெல்மெட் அணிந்திருந்தது  தெரியவந்துள்ளது. 

மொஹித்தை பொறுத்தவரையில் உடற்பயிற்சி வீடியோக்களை தவிர தனது தனிப்பட்ட எதிரிகளை விமர்சிக்கும் வகையிலும் டிக்டோக்கில் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.  அதனால் ஏதேனும் முன்விரோத காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.