‘டிக் டோக்’ காதலருடன் தான் இருப்பேன்: அடம்பிடித்த பத்தாம் வகுப்பு மாணவி; திணறிய போலீசார்!?

 

‘டிக் டோக்’ காதலருடன் தான் இருப்பேன்: அடம்பிடித்த பத்தாம் வகுப்பு மாணவி; திணறிய போலீசார்!?

டிக்டோக் வீடியோ மூலம் பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ்த்திய  இளைஞர்  கைது  செய்யப்பட்டுள்ளார். 

சென்னை: டிக்டோக் வீடியோ மூலம் பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ்த்திய  இளைஞர்  கைது  செய்யப்பட்டுள்ளார். 

சென்னை வடபழனியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அசார் என்ற இளைஞர் டிக்டோக்  வீடியோ மூலம் மாணவி  ஒருவரைச் சந்தித்துள்ளார்.பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை  அந்த இளைஞர் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். 

tik tok

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளியில் சென்ற மாணவி, வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை தேடி வந்துள்ளனர். இதையடுத்து  மாணவி அசாருடன்  வீடு திரும்பியுள்ளார். அசாரைக் காதலிப்பதாகவும், அவருடன் தான் சேர்ந்து வாழப்போவதாகவும் மாணவி  கூற இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சூளைமேடு போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். 

இதைத் தொடர்ந்து மாணவி மற்றும் அசாரை போலீசார் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.  அசாரைப் பிரிந்து வாழ முடியாது என மாணவி  பிடிவாதமாகக் கூற அவருக்கு டிக்டோக் வீடியோ பற்றிய விழிப்புணர்வையும், கவுன்சிலிங்கும்  கொடுத்து போலீசார் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

arrest

இதையடுத்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில்  அசாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.