டிக் டாக் பெண் நட்புடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம் ! கணவன் கண்ணீர் !

 

டிக் டாக் பெண் நட்புடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம் ! கணவன் கண்ணீர் !

ஆந்திராவில் டிக் டாக் மூலம் அறிமுகம் ஆன பெண்ணை நம்பி 2 குழந்தைகளுடன் பெண் ஒரு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாயமான பெண்ணை மீட்டுத் தரக் கோரி உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 
ஆந்திர மாநிலம் குர்ணூல் மாவட்டத்தில் வசித்து வரும் அர்ச்சனா என்பவர் டிக் டாக்கில் அறிமுகமான அஞ்சலி என்ற பெண்ணுடன் சேர்ந்து அடிக்கடி வீடியோ வெளியிட்டு வந்தார். இதற்கு பல பேர் லைக் போட்டு வந்தனர். இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கி பழகி வந்தனர்.

fir

அர்ச்சானவுக்கு கணவர் ரவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் வாரத்தில் 3 நாள் மட்டுமே தங்குவதால் அர்ச்சனா டிக் டாக்கில் மூழ்கியுள்ளார். அர்ச்சனா வீட்டில் கணவர் இல்லாத சமயத்தில் அடிக்கடி அஞ்சலி வந்து செல்வாராம். இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்னர், அர்ச்சனா திடீரென 2 குழந்தைகளுடன் மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்துள்ளனர்

tik tok

. டிக் டாக் மோகத்தில் மயங்கி அஞ்சலியுடன் சென்ற அர்ச்சனா மற்றும் இரண்டு குழந்தைகளையும் மீட்டுத் தருமாறு கேட்டுள்ளனர். வழக்குப் பதிந்துள்ள காவல் துறையினர், அஞ்சலி, அர்ச்சனா ஆகியோரின் சமூக வலைத்தள செயல்பாடுகளைக் கண்காணித்து தேடி வருகின்றனர். டிக் டாக் செயலியால் அமைதியாக இருக்கும் குடும்பத்தில் பல பிரச்சனைகள் வந்து சேர்கிறது. யாரோ ஒருவர் சம்பாதிப்பதற்காக பலபேரின் குடும்பங்கள் சீரழிகிறது.இப்படிப்பட்ட சூழல்களை உருவாக்குவதை நினைத்து மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். இந்த செய்தியை படிக்கும் நீங்கள், இப்படித்தான் சிவகங்கையிலும் ஒரு சம்பவம் நடந்துச்சு என்று பேச ஆரம்பிக்காதீர்கள். அதற்கு நமக்கு நேரமில்லை.