‘டிக் டாக்’ பிரபலத்திற்கு கொலை மிரட்டல்: போலீசில் பரபரப்பு புகார்!

 

‘டிக் டாக்’ பிரபலத்திற்கு கொலை  மிரட்டல்: போலீசில் பரபரப்பு புகார்!

சோனாலி. இவர் டிக்  டாக் மூலம் அம்மாநிலத்தில் பிரபலமானவராக மாறினார்.

டிக் டாக் பிரபலம்  சோனாலி போகத் தனது சகோதரி மற்றும் மைத்துனர் தனக்கு  கொலை மிரட்டல் விடுத்தாக  பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். 

ஹரியானாவைச் சேர்ந்த சோனாலி. இவர் டிக்  டாக் மூலம் அம்மாநிலத்தில் பிரபலமானவராக மாறினார். இதனால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆதம்பூர் தொகுதியில் போட்டியிட்ட இவருக்கு சீட் வழங்கியது.  இருப்பினும் சோனாலி தோல்வியை தழுவினார். 

sonali

இந்நிலையில்  சோனாலி போகத் தனது சொந்த ஊரான புந்தன்கலன் கிராமத்துக்கு கடந்த 29 ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது அங்கு அவரது சகோதரி மற்றும் மைத்துனர் இருந்துள்ளனர். ஒரு பக்கம் சோனாலியை காண அப்பகுதி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் காத்திருந்தனர். 

sonali

இதையடுத்து வீட்டில் சகோதரி ருகேஷுக்கும் சோனாலிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாறியதாகக்  கூறப்படுகிறது. இதையடுத்து சோனாலி உள்ளூர் காவல் நிலையத்தில்,  தனது சகோதரி மற்றும் மைத்துனர் தன்னை தாக்கியதோடு, தனக்கு  கொலை மிரட்டல் விடுத்தாக   புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.