‘டிக் டாக்கில் டூயட்…இளம்பெண்ணுடன் ஓடிய மன்மதன்’ : நடுத்தெருவில் குழந்தையுடன் தவிக்கும் மனைவி!

 

‘டிக் டாக்கில் டூயட்…இளம்பெண்ணுடன் ஓடிய மன்மதன்’ : நடுத்தெருவில்  குழந்தையுடன்  தவிக்கும் மனைவி!

இதனிடையே  டிக்டாக்கில் அதிக ஈர்ப்பு கொண்ட ராஜசேகர், அதில் வீடியோக்களை பதிவு செய்து வந்ததோடு, பல பெண்களுடனும் டூயட் பாடி  வந்துள்ளார். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கும் கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து மதுவுக்கு அடிமையான ராஜசேகர் மனைவி சுகன்யா அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இவர்கள் விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்ல, அவர்கள் சமாதானம் செய்தனர்.  இதனிடையே  டிக்டாக்கில் அதிக ஈர்ப்பு கொண்ட ராஜசேகர், அதில் வீடியோக்களை பதிவு செய்து வந்ததோடு, பல பெண்களுடனும் டூயட் பாடி  வந்துள்ளார். 

tn

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு   வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய ராஜசேகர் வீடு திரும்பவில்லை. அதே வேளையில் புதுக்கோட்டையை சேர்ந்த கவிநயா என்ற பெண்ணை காணவில்லை என்று அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். அதில் கவிநயா செல்போனை ஆய்வய் செய்தபோது அவர், ராஜசேகருடன் பேசி வந்தது தெரியவந்தது. 

ttn

விசாரணையில் இருவரும் டிக் டாக் செய்துவந்த போது  பழக்கம் ஏற்பட்டு வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் புதுக்கோட்டையில் வளைத்து பிடித்தனர். இதுகுறித்து கவிநயா, ராஜசேகருக்கு திருமணம் ஆனது தனக்கு தெரியாது. அவரை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து அவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். 

மனைவி சுகன்யா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பண்ருட்டி  போலீசார் மன்மதன் ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.