டிக் டாக்கில் ஆட்டம் போட்டு வந்த மதுரை சுகந்தி.. நள்ளிரவில் வீட்டை விட்டுத் துரத்திய ஊர்மக்கள் : டிக் டாக் பரிதாபங்கள்!

 

டிக் டாக்கில் ஆட்டம் போட்டு வந்த மதுரை சுகந்தி.. நள்ளிரவில் வீட்டை விட்டுத் துரத்திய ஊர்மக்கள் : டிக் டாக் பரிதாபங்கள்!

டிக்டாக் செயலி அறிமுகமானதில் இருந்து, டிக் டாக் வாசிகள் செய்யும் அலப்பறைகள் சொல்லி மாளாது.

டிக்டாக் செயலி அறிமுகமானதில் இருந்து, டிக் டாக் வாசிகள் செய்யும் அலப்பறைகள் சொல்லி மாளாது. பல பேர் இதன் மூலம் பிரபலம் ஆகியுள்ளனர். ஆனால், லைக்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காக டிக் டாக்கில் எந்த விதமான வீடியோக்களையும் போடத் துணிந்துள்ளனர்.

ttn

இதே போல, தேனி மாவட்டம் கொடுவிலார் பட்டி அருகே உள்ள நாகலாபுரத்தை சேர்ந்தவர் மதுரை சுகந்தி. இவர் பெரும்பாலும் அந்த மாதிரியான பாடல்களுக்கு டிக்டாக் செய்து, டிக் டாக்கில் மிகப் பிரபலமாகியுள்ளார். 

ttn

இது மட்டுமில்லாமல் அவர் டிக்டாக் மூலம் கிடைத்த  பல ஆண் நண்பர்களுடன் பழகி வந்துள்ளார். அந்த ஆண் நண்பர்கள் அடிக்கடி இவரது வீட்டுக்கு வந்து போவதுமாக இருந்துள்ளனர். ஒரு முறை சுகந்தி மீதும் அவரது காதலன் மீதும் ஒருவர் புகார் கொடுத்தும் கூட எதற்கும் அசராத சுகந்தி வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.

ttn

இந்நிலையில், டிக் டாக்கில் சுகந்திக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடுப்பான அந்த இளைஞர், சுகந்தியோடு விட்டு வைக்காமல் அந்த ஊர் பெண்கள் அனைவரையும் சேர்த்து விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

ttn

அந்த வீடியோவை பார்த்து ஆத்திரமடைந்த ஊர்மக்கள் சுகந்தியை ஊரை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கூறி அவரை வீட்டை விட்டு நள்ளிரவில் துரத்தியுள்ளனர். சுகந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர்.

ttn

மேலும், எந்த காரணத்தைக் கொண்டும் இந்த ஊர்ப்பக்கம் வரக்கூடாது என்று சுகந்தியை எச்சரித்துள்ளனர். இது போன்ற டிக்டாக் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதால் டிக் டாக் செயலியைத் தடை செய்ய வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.