டிக்கெட் பிரச்சினையில் அஜித் ரசிகர் தற்கொலை முயற்சி!
நடிகர் அஜித்குமார் நடிப்பில், போனி கபூர் தயாரித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படம் இன்று ரிலீஸாகி, உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில், டெல்லி கணேஷ், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் அஜித்குமார் நடிப்பில், போனி கபூர் தயாரித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படம் இன்று ரிலீஸாகி, உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில், டெல்லி கணேஷ், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான இந்த படத்தைப் பார்ப்பதற்காக நடிகர் சாந்தனு இன்று காலை சத்யம் திரையரங்கிற்கு சென்றுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சாந்தனு வெளியிட்டுள்ள தகவல் பலத்த அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
I DONT KNW WAT TO SAY!
At #Sathyam now where a man RIGHT NXT TO ME was bathing in petrol&searching fr a matchstick to burn himself bcz of sme ticket issue for #NKP#THALA or any othr STAR will def not encourage this!
It’s ur life against a movie ticket
Police have arrested him nw— Shanthnu Buddy (@imKBRshanthnu) August 7, 2019
நடிகர் சாந்தனு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது, ‘சத்யம் திரையரங்கில் நேர்கொண்ட பார்வை படத்துக்கான டிக்கெட் பிரச்னையில் எனக்கு அருகில் இருந்த நபர் கிட்டத்தட்ட உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றிக் குளித்த மாதிரி இருந்துக் கொண்டு தீக்குளிக்க தீப்பெட்டி தேடிக் கொண்டிருந்தார். நல்ல வேலை, அவரை காவல்துறையினர் கைது செய்து விட்டனர். அஜித் மட்டும் கிடையாது, எந்த ஹீரோவாக இருந்தாலும், டிக்கெட் பிரச்சனைக்காக இப்படியெல்லாம் ரசிகர்கள் செய்வதை விரும்பமாட்டார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.