டாஸ்மாக் விவகாரம்: உச்சநீதிமன்றம் சென்றாலும் வருவோம் உமைத் தடுக்க! தமிழக அரசுக்கு கமல் எச்சரிக்கை
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று லட்சக் கணக்கான குடிமகன்கள் இன்று மது வாங்கிச் சென்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரானா தாக்கம் அதிகரித்து உள்ளதால் ஊரடங்கு முடியும் வரை திறக்க கூடாது என மக்கள் நீதி மய்யம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. மாறாக ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம்
தமிழக அரசு.
எங்கும் வருவோம் உமைத் தடுக்க.
மக்கள் நீதியே வெல்லும்.— Kamal Haasan (@ikamalhaasan) May 9, 2020
இந்நிலையில் மக்கள்நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம்
தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க.
மக்கள் நீதியே வெல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.