டாஸ்மாக் வாங்க ஆதார் அட்டையை வேண்டாமே! தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

 

டாஸ்மாக் வாங்க ஆதார் அட்டையை வேண்டாமே! தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மேலு மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,409 ஆக உயா்ந்துள்ளது.  இதனிடையே தமிழக அரசுக்கு அதிகளவு வருவாய் ஈட்டி தரும்  மதுக்கடைகள் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறின.

tt

இதை தொடர்ந்து தமிழகத்தில் இன்று (மே 7)   முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ள காரணத்தினால், நாளை முதல் மதுபானம் விலை உயரும் என்று டாஸ்மாக்  நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் மதுவாங்குவோர், ஆதார் அட்டையை சமர்பித்தால் மட்டுமே மது வழங்கப்படவேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் விதிமுறைகளை வகுத்தது.

இந்நிலையில் டாஸ்மாக் கடையில் மது வாங்க வருவோருக்கு ஆதார் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்துள்ளது. பலரிடம் ஆதார் இல்லை என்பதால் அதற்கு விலக்கு அளிக்குமாறு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை வருகிற 14ம் தேதி உயர்நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.