டாஸ்மாக் கடை திறக்காததால் வந்த விபரீதம்! போதைக்காக வார்னிஷ் குடித்த நபர் பலி

 

டாஸ்மாக் கடை திறக்காததால் வந்த விபரீதம்! போதைக்காக வார்னிஷ் குடித்த நபர் பலி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3,588 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3,588 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99ஆக உயர்ந்துள்ளது.  நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கிலும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ரெயில், விமான போக்குவரத்துகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளும் நாடு முழுக்க மூடப்பட்டுள்ளது.

death

இந்நிலையில் செங்கல்பட்டில் மது கிடைக்காததால்  31 வயதான கார் ஓட்டுநர் சிவராமன், போதைக்காக குளிர்பானத்தில் பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் வார்னிஷை கலந்து குடித்துள்ளார். உடனே அருகிலிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.