டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றுங்கள் : சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் !

 

டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றுங்கள் : சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் !

ஆங்காங்கே மதுக் கடைகளை மூட கோரியும், வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் குடி பிரச்சனை ஒரு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. ஆங்காங்கே மதுக் கடைகளை மூட கோரியும், வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுவால் சீரழிந்த குடும்பங்கள் பல. மதுக் கடைகளின் மூலம் வருமானம் அதிகமாக வருவதாலோ என்னமோ தமிழக அரசு மதுக் கடைகளை மூடும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் உள்ளது. 

Tasmac

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. அந்த கடை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ளதால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றுங்கள் என அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

protest

ஆனால், கடை இன்னும் வேறு இடத்திற்கு மாற்றப் படாததால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.