‘டாஸ்மாக்கில் தகராறு’ ஊழியர்களுக்குச் சரமாரியாக வெட்டு..ஒருவர் பரிதாப பலி: கூலிப்படை கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!

 

‘டாஸ்மாக்கில் தகராறு’ ஊழியர்களுக்குச் சரமாரியாக வெட்டு..ஒருவர் பரிதாப பலி: கூலிப்படை கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!

 ராமமூர்த்தி, அண்ணாமலை ஆகியோர் தண்ணீர்தாசனூர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கில் வேலை செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள ஆலச்சம்பாளைம் பகுதியைச் சேர்ந்த  ராமமூர்த்தி, அண்ணாமலை ஆகியோர் தண்ணீர்தாசனூர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கில் வேலை செய்து வருகின்றனர். அந்த டாஸ்க்மக்குக்கு நேற்று மதியம் வந்த  துரைராஜ், அனுமதி பெறாமல் இந்த பார் நடத்தப்படுவதாகக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். சற்று நேரத்தில் தகராறு, கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது,   ராமமூர்த்தி, அண்ணாமலை சேர்ந்து துரைராஜை அடித்ததாகக் கூறப்படுகிறது. 

ttn

அதன் பின்னர் அங்கிருந்து சென்ற துரைராஜ் இரவு 10 மணிக்குக் கூலிப்படையுடன் டாஸ்மாக்குக்கு வந்து ஊழியர்களை ராமமூர்த்தி மற்றும் அண்ணாமலையைத் தாக்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், அந்த கூலிப்படையினர் அவர்கள் இரண்டு போரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். அதில் படுகாயம் அடைந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். 

ttn

தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அண்ணாமலையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அண்ணாமலைக்குச் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பிச் சென்ற கூலிப்படையினரையும், துரைராஜையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.