டர்பனுக்குள் 1 கிலோ தங்கக்கட்டிகள்…’அயன்’ படப்பாணியில் மோசடி செய்த இருவர் கைது!

 

டர்பனுக்குள் 1 கிலோ தங்கக்கட்டிகள்…’அயன்’ படப்பாணியில் மோசடி செய்த இருவர் கைது!

பின்னர் அவர்களைக் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டர்பனுக்குள்  வைத்து கடத்தப்பட்ட 1 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

TTN

தாய்லாந்தின்  பாங்காக் நகரத்திலிருந்து சுப்ரீத் சிங் மற்றும் தமன்ப்ரீத் சிங் ஆகிய இருவர் நேற்று சென்னைக்கு விமானம் மூலம் வந்தனர். அப்போது அவர்களை பரிசோதித்த போது அவர்களிடம் எந்த பொருளும் இல்லை. இருப்பினும் அவர்கள் பதற்றமாக இருந்ததால், அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்தனர்.

TTN

அதில் அவர்கள் அணிந்திருந்த டர்பனுக்குள்  தங்க கட்டிகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தன. அவர்களிடமிருந்து  ஒரு கிலோ 800 கிராம் எடையுள்ள 74,20,000 ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகள்  பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களைக் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நேற்று ஒருநாள் மட்டும் இதுபோன்ற கடத்தலில் 5 பேர் கைதாகியுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 1 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.