டப்ளின் விமான நிலையத்தில் விமான சேவை தொடங்கியது

 

டப்ளின் விமான நிலையத்தில் விமான சேவை தொடங்கியது

விமான நிலையத்தின் மீது ஆளில்லா விமானம் பறந்த காரணத்தால் நிறுத்தப்பட்ட விமான சேவை, டப்ளின் விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கியது

டப்ளின்: விமான நிலையத்தின் மீது ஆளில்லா விமானம் பறந்த காரணத்தால் நிறுத்தப்பட்ட விமான சேவை, டப்ளின் விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கியது.

ஆளில்லா விமானம் பறந்த காரணத்தால் பிரிட்டனின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான கேட்விக் விமான நிலையத்தின் சேவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 36 மணி நேரம் நிறுத்தப்பட்டது. அதேபோல், துபாய் சர்வதேச விமான நிலையத்தின் சேவையும் சந்தேகத்துக்கு உரிய வகையில் ஆளில்லா விமானம் பறந்த காரணத்தால் கடந்த வாரம் நிறுத்தப்பட்டு பின்னர் இயக்கப்பட்டது.

அந்த வகையில், விமான நிலையத்தின் மீது ஆளில்லா விமானம் பறந்த காரணத்தால் டப்ளின் விமான நிலையத்தின் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இச்சேவை மீண்டும் தொடங்கப்பட்டது எனவும், பயணிகள் தங்களது விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் டப்ளின் விமான நிலையம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.