‘ஜோவிடம் இருந்து இதைத் தான் கற்றுக்கொண்டேன்’: நடிகர் சூர்யா ஓபன் டாக் 

 

‘ஜோவிடம் இருந்து இதைத் தான் கற்றுக்கொண்டேன்’: நடிகர் சூர்யா ஓபன் டாக் 

நடிகை ஜோதிகா நடிப்பில் 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஜாக்பாட்.

நடிகை ஜோதிகா நடிப்பில் 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஜாக்பாட்.  கல்யாண் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ரேவதி நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.அதில் நடிகை ஜோதிகா,சூர்யா, இயக்குநர் கல்யாண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

அப்போது ஜோதிகா பேசுகையில், ‘முதலில் சிவகுமார் அப்பாவுக்கு நன்றி. 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிக்கிறேன். இந்த படம் எனக்கு ரொம்ப புதுசு. இப்படி ஒரு கதையில் நான் இதுவரை நடித்ததே இல்லை. ரேவதி மேடத்திற்கு சம்மனா ரோல். கல்யாண் சாருக்கு நன்றி. சூர்யாதான் என்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர். அவர் இல்லை என்றால் நான் இல்லை. என்னுடைய ஜாக்பாட் சூர்யா தான். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதிலிருந்து வீட்டு வேலை பகிர்ந்து கொள்வது வரை அனைத்திலும் உதவியாக இருப்பார். ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் உள்ளது’  என்றார். 

jo

அவரை தொடர்ந்து பேசிய சூர்யா, ‘என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட்.  இன்றைக்கும் வேலையில் எவ்ளோ சின்சியரா இருக்கவேண்டுமென்று ஜோதிகா பார்த்துத் தான் கத்துகிறேன்.  அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து தான் செய்வார். தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றி, சமூகத்தைப் பற்றி மிகச் சரியான மதிப்பீட்டை வைத்திருப்பார்கள். ஜோக்கு ஏற்ற படம் இது’ என்று கூறியுள்ளார்.