ஜோதிடமும் காதலும் : எந்த ராசிகாரர்கள் விரைவில் காதல் வயப்படுவார்கள்?

 

ஜோதிடமும் காதலும் : எந்த ராசிகாரர்கள் விரைவில் காதல் வயப்படுவார்கள்?

எந்தந்த ராசிகாரர்கள் எளிதில் காதல் வயப்படுவார்கள் என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

சென்னை: ஜோதிடத்தில் நம் முன்னோர்கள் காதல் திருமணம் பற்றியும் யார், யாருக்கெல்லாம் காதல் திருமணம் நடைபெறும் என்பதை பற்றியும் பல்வேறு ஜோதிட கிரந்தங்களில் மிகவும் தெளிவாக கூறியுள்ளனர். மேலும் எந்த ராசிகாரர்கள் விரைவில் காதல் வயப்படுவார்கள் என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

1. லக்னத்துக்கு  7-ம் வீட்டுக்கு உடையவரும்  9 -ம் வீட்டுக்கு உடையவரும்  பரிவர்த்தனையாகி இருந்து  5-ம் வீட்டில் ஒரு பாவ கிரகம் இருந்தால், தடைகளுடன் காதல் திருமணம் நிறைவேறும். இவர்களுக்கு பெண் குழந்தைகள்தான் அதிகமாகப் பிறக்கும். 

2. ஆண் ஜாதகமாக இருந்தால் 7 -ம் வீட்டுக்கு உடையவர்  ஜாதகருடைய பாதகாதிபதியின் சாரத்தில் இருந்தாலோ அல்லது ராகு, கேதுவின் சாரத்தில் (அதாவது நட்சத்திரத்தில்) இருந்தாலோ காதல் திருமணம் நடக்கும். 

kaathal

3. பெண் ஜாதகத்தில்  8 – ம் வீட்டுக்கு உரியவர் ராகு, கேதுவின் நட்சத்திரத்தில் இருந்தால் காதல் திருமணம் நடக்கும்.

4. ஒருவருடைய ஜாதகத்தில் 7-ம் வீட்டின் அதிபதி சுப கிரகத்தின் பார்வை பெறவேண்டும். அத்துடன் 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமலும் இருக்க வேண்டும்.

5.சூரியனுடன் குரு அல்லது சூரியனுக்கு 2, 5, 7, 9, 12 – ம் இடங்களில் குரு இருந்தால்  தந்தையே காதல் திருமணத்தை நடத்தி வைப்பார்.

ஜோதிடத்தில் காதலை குறிக்கக் கூடிய கிரகம் சுக்கிரன். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருப்பாரானால் அவர்கள் சீக்கிரமே காதல் வயப்படுவார்கள். 

kathakll

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் அவருடைய முகம் வசீகரம் உடையதாக இருக்கும். மேலும் எதிர்பாலினத்தினரை கவர்ந்திழுக்கக் கூடிய திறமை இருக்கும்.

ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஏழாம் இடம் திருமணத்திற்கு என்று சொல்லப்பட்டாலும், லக்னாதிபதியும் ,சுகாதிபதியும் நல்ல நிலையில் இருந்தால் காதல் கை கூடும். உதாரணமாக ஏழாமிடத்தில் ஒருவருக்கு சந்திரனோ சுக்கிரனோ ராகுவோ இருந்தால் கட்டாயம் திருமணம் காதல் திருமணமாக இருக்க வாய்ப்புகள் அதிகம். 

மேஷம்: இவர்களுக்கு குடும்பாதிபதியும் – சப்தமாதிபதியும் சுக்கிரன். எனவே இவர்களுக்கு காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கும்.

தனது நேர்மையான நடவடிக்கைகளால் எதிர் பாலினத்தினரை கவர்ந்து இழுப்பார்கள். இவர்களை நிறைய பேர் காதலிப்பார்கள். ஆனால் காதல் சம்பந்தமான விஷயங்களில் நெளிவு சுளிவாக இருக்க மாட்டார்கள்.

ரிஷபம்: சுகத்திற்கும் சுத்தத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த ராசியில்தான் சந்திரன் உச்சமடைவார்.எனவே காதலிப்பதற்காகவே இந்த ராசிக்காரர்கள் பிறந்தவர்கள். தாங்கள் விரும்பும் நபரை தன் பக்கம் இழுக்கம் திறமை கொண்டவர்கள். 
தன்னை விரும்புபவருக்கு பிடிக்கும் விஷயங்களாக செய்து தன் பக்கமே அவர்களை வைத்திருக்கும் வித்தை அறிந்தவர்கள்.

மிதுனம்: இந்த ராசிக்காரர்களை விட இவர்களை விரும்புபவர்கள் வேகமாக இருப்பார்கள். நிதானமாக அனைத்து முடிவுகளையும் எடுப்பதால் இவர்களுடைய காதல் விளக்கெண்ணை மாதிரி பிசுபிசுக்கும் வாய்ப்பு அதிகம். தன்னை காதலித்தவர்களின் நிலையை இவர்கள் உணரும் போது காலம் கடந்திருக்கும்.

kaathalhjkk

கடகம்: காதலிப்பதற்காகவே பிறந்த ராசிகளில் இந்த ராசியும் ஒன்று. சந்திரனை ராசிநாதனாகக் கொண்டதால் வட்ட முகமும்,அழகான கூந்தலும் இவர்களுக்கு அமைந்திருக்கும்.
இவர்கள் வாழ்வில் காதல் என்பது நிச்சயம் உண்டு. சீக்கிரமே உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவர்கள். குடும்பத்திற்கும் குடும்ப உறுப்பினர்களின் பாசத்திற்கும் அடிமையாய் இருப்பவர்கள்.

சிம்மம்: இவர்களுடைய கண் வசீகரம் உடையதாக இருக்கும். இவர்களுக்கு தைரியாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியும் சுக்கிரன். காதலிப்பதையும் காதலிக்கப்படுவதையும் விரும்புபவர்கள். 

இவர்கள் ராஜகிரகம் என்று அழைக்கக்கூடிய கிரகமான சூரியனை அடிப்படையாகக் கொண்டதால் அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் வலுவை உடையவர்கள்.

கன்னி: காதலிப்பதற்காகவே பிறந்தவர்கள் இவர்கள். முதல் காதல் தோற்றுப் போனால் கூட மீண்டும் இவர்களுக்கு வெறு ஒரு காதல் துளிர்க்கும். இவர்கள் ராசியில் தான் சுக்கிரன் பலமிழந்து காணப்படுவார். 

இருப்பினும் இந்த ராசியில் சந்திரன் பலமிருப்பதால் முகம் மிகவும் வசீகரம் உடையதாக இருக்கும். காதல் விஷயத்தில் இவர்கள் எப்போதும் நம்பர் 1. 

kaatha

துலாம்: இவர்களுக்கு ராசிநாதனும் அஷ்டமாதிபதியும் சுக்கிரன். காதல் இவர்களுக்கு கை வந்த கலை. சீக்கிரமே அனைவரையும் தன் பால் ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள். காதலில் வெற்றி பெற பொறுமை மிகவும் அவசியம். 

விருச்சிகம்: இவர்களுக்கு தான் காதலிப்பவர்களை விட தன்னைக் காதலிப்பவர்களை அதிகமாக பிடிக்கும். எப்போதுமே போர் வீரன் போல் காட்சியளிப்பதால் காதல் கை கூடுவதற்கு காலம் பிடிக்கும்.

தனுசு: காதலருக்கு கடிதம் எழுதினால் அதை அவரிடம் கொடுக்காமல் அவர்களுடைய பெற்றோரின் கையில் கொடுக்கும் அந்நியன் அம்பி அளவிற்கு நேர்மையானவர்கள். 

மகரம்: காதல் என்பது இவர்களுக்கு மிக முக்கியமான விஷயமாகும். காதல் என்பது இல்லாமல் இருக்க மாட்டார்கள். இவர்களுடைய காதல் தவறாக இருக்காது. காதல் என்பது ஆத்மார்த்தமாக இருக்கும். 

kaathaal

கும்பம்: காதலைப் பற்றி இவர்களுக்கு கடுமையான கற்பனை இருக்கும். காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும்.

மீனம்: இந்த ராசியில்தான் சுக்கிரன் உச்சமாக இருப்பார். இவர்களிடம் அன்பும், பொறுமையும், அழகும், வசீகரமும் நிலைத்திருக்கும். இவர்களை யார் நேசிக்கின்றார்களோ அவர்களை இவர்கள் நேசிப்பார்கள்.