ஜோதிடத்தில் உள்ள 27 யோகங்களும் அதன் பலன்களும்

 

ஜோதிடத்தில் உள்ள 27 யோகங்களும் அதன் பலன்களும்

ஜோதிடத்தில் அமைந்துள்ள இருபத்து ஏழு வகையான யோகங்களை பற்றியும் அதன் மேன்மைகளை பற்றியும் பார்போம்.

யோகங்கள் மொத்தம் 27ஆகும். யோகம் என்பது வானத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும்  செல்லுகின்ற மொத்த தூரமாகும். இந்த 27 யோகங்களும்கூட முகூர்த்தம் எனும் நற்காரியங்கள் செய்வதற்கான நாள் தேர்வு செய்யகிழமை, நட்சத்திரம், திதி ஆகியவைப் போன் றே பயன்படும் நான்காவது அமைப் பாகும். 

astro

பஞ்சாங்கம் எனும் பஞ்ச (ஐந்து) அங்கங்களில் நான்காவது அமைப்பான இதை அநேகர் கண்டு கொள்வதே இல்லை. ஜாதக குறிப்பில் ஜனன வாக்கியத்தில் பலர் இதையும் சேர்த்து குறிப்பிட்டாலும், முகூர்த்த அடிப்படையில் நல்ல நாள் தேர்வு செய்யும்போது நான்காவதான இந்த நித்திய நாம யோகமும் அடங்கும் என்பதை மறந்து விடுகி ன்றார்கள்.

27 யோகங்களில் விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வியாகாதம், வஞ்ரம், வியதீபாதம், பரிகம், வைதீருதி என்பவை தவிர்க்க வேண்டிய யோக நாட்கள் ஆகும் .

யோகத்தின் பெயர்களும், அவற்றிற்குரிய பலன்களும் பின்வருமாறு :

விஷ்கம்பம் — மனநடுக்கம்.
ப்ரீதி — பிரியம் .
ஆயுஷ்மான் — வாழ்நாள்.
சவுபாக்கியம் — புண்ணியம்.
சோபனம் — நலம்.
அதிகண்டம் — பெரிய கண்டங்கள்; 
சுகர்மம் — அறம். 
திருதி — துணை.
சூலம் — சில திசைப் பயண இடையூறுகள்.
கண்டம் — ஆபத்துக்கள். 
விருத்தி — ஆக்கம்.
துருவம் — ஸ்திரத்தன்மை பெறுதல்.
வியாகாதம் — பாம்பு முதலானவற்றால் ஆபத்து.
அரிசனம் — மகிழ்ச்சி.
வச்சிரம் — ஆயுதங்களால் தொல்லை
சித்தி — வல்லமை.
வியதீபாதம் — கொலை. 
வரியான் — காயம். 
பரிகம் — தாழ்வு. 
சிவம் — காட்சி.
சித்தம் — திறம்.
சாத்தியம் — புகழ்.
சுபம் — காவல்.
சுப்பிரம் — தெளிவு. 
பிராம்மம் — பிரமை. 
மாஹேத்திரம் — இந்திரனைப் பற்றிய அறிவு.
வைத்திருதி — பேய்களால் தொல்லை .

siva

கீழே 27 யோகங்களின் பொதுவான பலன்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாதக அமைப்புப்படி கிரகங்களின் நிலைகளின்படி குணாதிசியங்கள் மாறக்கூடும் என்ற போதிலும் இதில் உள்ள அடிப்படை ஒன்றிரண்டு அவர்களிடம் இருக்கவே செய்யும்.

நட்சத்திரங்களின், திதிகளின், குணாதிசயங்களோடு, யோகங்களில் பிறந்த பலனும் இணைந்து காணக் கூடும்.

1. விஷ்கம்பம் (விஷ் யோகம்):-

இது அசுப யோகமாகும்.இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதிரியை  வெற்றிகொள்வார்கள். மற்ற வர்களை சட்டென்று அறிந்து கொள்வதுடன் பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டி யே உணரும் தீர்க்க தரிசனம் இருக்கும். மாந்திரீக விஷய ங்களில் நாட்டமிருக்கும். எவருக்கும் கட்டுப்படாத தன்னிச்சையான சுதந்திரப்பிரியர்கள், சுற்றங்களை மதி ப்பார்கள். 

2. ப்ரீதி (ப்ரீ யோகம்):-

இது சுபமான யோகமாகும். இதில் பிறப்பவர்கள் இனிய சொல் பேசுபவராகவும், நல்ல செயல்களையும் செய்பவர்களாகவும் இருப்பார்கள். பெரியோர்கள், ஞானிகள், மகான்கள், குரு ஆகி யோர்களை மதிப்பவராகவும் அவர்களை வணங்குபவராகவு ம் இருப்பார்கள். உறுதியான மனமும், செயல் பாட்டுத் திறமையும் இருக்கும். 

3. ஆயுஷ்மான் (ஆயு யோகம்):-

இது சுப யோகமாகும். பெரியவர்கள், மகான்கள், ஞானி யோகிகள்  “ஆயுஷ்மான் பவ” என்று இந்த யோகத்தின் பெயரால் வாழ்த்துவது உண்டு. “ஆயுஷ்மான் பவ” என்றால் நீடுழி பல்லாண்டு வாழ்க என்று பொருளாகும். அதற் கேற்ப இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல வசதி யாக வாழ்வார்கள். 

4. செளபாக்யம் (செள யோகம்):-

பெயரே செளபாக்யம் எனும் போது இவர்களின் சுக செளக்யம் நன்றாகவே இருக்கும். இதுவும் சுபமான யோகம் தான். இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடையவர்களாகவும், உறுதியான மனம் உடைய செயல் திறன் மிக்கவர்களாகவும், நல்ல பக்திமான்களாகவும், ஈவு இரக்கம் உடைய தர்ம வான்களாக இருப்பார்கள். 

amman

5. சோபனம் (சோ யோகம்):-

சுப யோகமான இதன் பொருள் இனிமையான சுகம் என்பதாகும். திரு மணமாகி முதல் இரவுக்கு “சோபனம்” என்று குறிப்பிடுவதுண்டு இதில் பிறந்தவர்கள் சுகமான இனிமையான வாழ்க்கையை விரும்புவார்கள்,நிபுணர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் குறிக்கோளே மகிழ்ச்சியான வாழ்க்கை தான். 

6. அதி கண்டம் (அதி யோகம்):-

பெயரே கண்டம் என்று பயமுறுத்துகின்றது. அதிலும் அதிகண் டம்.  எனவே அடிக்கடி விபத்து கண்டங்கள் ஏற்படும். துன்பம் தொல்லை கஷ்டம் தாக்கும். மற்றவர்களுக்கு தொல்லைகளையும், பிரச்சினைகளையும், துன்பங்களையும் ஏற்படுத்துவார்கள். பிறரை துன்பப்படுத்தி அதில் மனம் மகிழ்ச்சியடைவார்கள். யான் பெற்ற துன்பம் பெறுக வையகம் என்ற குறுகிய மனப்பான்மையுடையவர்க ளாக இருப்பதுண்டு. 

7. சுகர்மம் (சுக யோகம்):-

இது நல்லயோகம். இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடன், பேரும் புகழும் பெற்று நல்ல வாழ்க்கை வாழக் கூடியவர்கள். பற்று, பாசம், ஈகை உடையவர் கள். நல்ல பக்திமான்களாகவும், தெய்வ காரியங்கள் செய்வதில், தீர்த்த யாத்திரை மேற்கொள்வதில் விருப்பம் இருக்கும். நட்பு சுற்றங்களை விரும்பி மதிப்பவர்களாக இருப்பார் கள்.

8. திருதி (திரு யோகம்):-

இது அசுப யோகம் தான் என்றாலும் சிலர் சுபயோகம் என்று  கூறுகின்றார்கள். இதில் பிறந்தவர்கள் வைராக்யமும், தன்னம்பிக்கை உடையவர்கள். எடுத்த காரியத்தை விடாப்பிடியாக முடிக்கும் ஆற்றல் உடையவர்கள். கொடுத்தவாக்கை காப்பாற்றக் கூடியவர்கள். நல்ல தைரியமும் உடையவர்கள். 
9. சூலம் (சூல யோகம்):-

இது அசுபமான யோகம். முன்கோபம், முரட்டுத்தனம், அலட்சியம்,  சோம்பல், எடுத்தெரிந்து பேசும் குணம் இருக்கும். எவரையும் மதிக்க மாட் டார்கள். எவருடனும் ஒத்து போகாமல் முரண்டு பிடிப்பவர்கள். மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பதுடன் வீண்வம்பு, சண்டை பிடிக்கவும் செய்வதுண்டு. 

10. கண்டம் (கண் யோகம்):-

இதுவும் அசுபமான யோகம் தான். கண்டம் என்ற பெயரைப் போல  இதில் பிறந்தவர்கள் அடிக்கடி கண்டங்களையும், துன்பங்களையும், உடல் நோய்த் துன்பங்களையும் சந்திக்க வேண்டி வரும். நல்ல எண்ணங்களும் இருக்காது. செயல்பாடுகளும் சிறப்பாக இருக்காது. 

astro

11. விருத்தி (விரு யோகம்):-

செல்வாக்குடையவர்கள். நல்ல அளவில் வசதியான வாழ்க்கை  அமைப்பவர்கள். சாஸ்திர நாட்ட மும், புலமையும் உடையவர்களாக இருப்பதுடன், தெய்வ பக்தியும், நற் பண்புகளும் உள்ளவர்கள். ஈகை தரும குணம் உடையவர்களாகவும், தெய்வ காரியங்கள் திருப்பணிகள் செய்பவர்களாக இருப்பார்கள். 

12. துருவம் (துரு யோகம்):-

இதில் பிறந்தவர்கள் தனிமையை விரும்பக் கூடியவர்களாக இருப்பதுடன் எதிலும் ஒட்டாமல் தாமரை இலைத் தண்ணீர்போல பட்டும், படாமலும் இருப்பார்கள். கபடமான எண்ணம் உடையவர்கள். சமயம் கிடைக்கும் போது பழிதீர்த்துக் கொள்ள தயங்க மாட்டார்கள். 

13. வ்யாகதம் (வ்யா யோகம்):-

இதுவும் அசுபமான யோகம் தான். முன்கோபமும், முரட்டுத்தனமும்  உடைய இவர்கள் சமுகத் தோடு ஒன்றிச் செல்லாமல், தன்னிச்சையாக செயல்படக் கூடியவர்கள். நல்லெண்ணம் இல்லாத இவர்கள் சூது வாது, கபடம் உள்ளவர்களே எனலாம். மன உறுதி இல்லாத இவர்கள் எண்ணங்களையும், செயல்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். 

14. ஹர்ஷணம் (ஹர் யோகம்):-

இது சுபமான யோகமாகும். செல்வாக்கும் மற்றும் சொல்வாக்கும் உடை யவர்கள். இனிமையான மென்மையான சுபாவம் கொண்டவர்கள். பின்னால் வருவதை முன்கூட்டியே யூகிக்கும் தீர்க்கத் தரிசிகளாக இருப்பதுண்டு. சுகமான ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். 

15. வஜ்ரம் (வஜ் யோகம்):-

இது சுபமான யோகமாகும். இதை சிலர் அசுபமான யோகம் என்று  கூறுகின்றார்கள். ஆனால் இது சுப மான யோகம் தான். இதில் பிறந்தவ ர்களுக்கு அசாத்தியமான மன உறுதி உடையவர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள், கொள்கைப் பிடிப்புள்ளவர்கள். எதையும் சாதிப்பவர்கள். துணிச்சலும், தைரியமும் உள்ள இவர்களிடம் கனிவும் இருக்கும். 

siva

16. சித்தி (சித் யோகம்):-

சுபயோகமான இதில் பிறந்தவர்களுக்கு எதுவும் சிந்திக்கும் உபாச னா சக்தியுடையவர்கள். தியானம்,யோகம் போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்கள். தீர்த்த யாத்திரைகள் மேற் கொள்வதில் விருப்பம் அதிகம். இமாலய யாத்திரை போன்ற கடினமான பயணங்களை மகிழ்வாக மேற் கொள்வதுண்டு செல்வமும், செல்வாக்கும் உடையவர்களே என்பதுடன் நல்ல குணம், உதவும் மனப்பான்மையு டையவர்கள் எனலாம்.

17. வியதீபாதம் (விய யோகம்):-

இது அசுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் சுயநலவாதி களாக இருப்பார்கள். துன்பங்களை யும், துயரங்களையும், கஷ்டங்களை யும் அடிக்கடி சந்திக்க வேண்டிவரும். வாழ்க்கை போராட்டமாக இருக்கும். சிந்தித்து, முன்யோசனையுடன் செயல் படாமல் அவசர முடிவால் பிரச்சினைகள் சந்திப்பார்கள். 
18. வரீயான் (வரீ யோகம்):-

இது சுபயோகமாகும். இதில் பிறந்தவர்கள் தலைமை தாங்கும் தகுதியுடையவர்களாக இருப்பார் கள். நல்ல தைரியமும் காரிய வெற்றியும் உடையவர்கள். பிறருக்கு உதவும் மனப் பான்மையுடையவர். தரும காரியங்கள் திருப் பணிகள் செய்வதில் நாட்டமிருக்கும் புகழ் பெறக் கூடிய வகையில் செயல்பாடுகள் இருக்கும். 

19. பரிகம் (பரி யோகம்):-

இது சுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் தனக்கென தனியான கொள்கையும், குறிக்கோளும் உடையவர்கள். அநேகமாக அதிலிருந்து மாற மாட்டார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள். பிறர் வாக்கு தவறினால் கோபம் கொண்டு அவர்களின் தொடர்பை வெட்டிக் கொள்வார்கள். 

20. சிவம் (சிவ யோகம்):-

இதுவும் சுபமான யோகம் தான். இதில் பிறந்தவர்கள் சிவனை வழிபடுபவர்களாகவும், தியானம், யோகம், பக்தி, ஞான மார்க்கத்தில் அதிக ஈடுபாடுடையவர்களாக இருப்பார்கள். ஞானிகள், மகான்கள், யோகிகள், பெரியோர்களை சந்திப்பதில் அதிக ஆர்வ முடையவர்கள். 

21. சித்தம் (சித் யோகம்):-

இது சுபமானயோகமாகும். இதில் பிறந்தவர்கள். அசாத்தியமான மன உறுதியுடையவர்கள். எதற்கு மே அஞ்சமாட்டார்கள். உறுதியான சித்த முடையவர்கள். எடுக்கும் முடிவுகளை சட்டென்று மாற்றிக் கொள்ள மாட்டார்கள். சாஸ்திர புலமை, பரிச்சி யமுடையவர்கள். 

jaihanuman

22. சாத்தியம் (சாத் யோகம்):-

இது சுபமான யோகமாகும். பெயரே சாத்தியம் என்று உள்ளதால்,  இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதையுமே சாத்தியமாக்கி விடு வார்கள். பிற பெண்களை வசியம் செய்து கொள்ளும் சாத்தியம் கூட இவர்களுக்கு உண்டு. 

23. சுபம் (சுப யோகம்):-

பெயரே சுபம் என்பதால் சுபமான யோகம் தான். இனிமையான  மென்மையான சுபாவம் கொண்டவர் கள். மகான்கள், யோகிகள், ஞானிகள், பெரியோர்களுக்கு சேவை செய்வதில் விருப்பம் உடையவர்கள். தெய்வ காரி யங்கள், திருப்பணிகள், பொது சேவை யிலும் நல்ல நாட்டமிருக்கும். 

24. சுப்பிரம் (சுப் யோகம்):-

இது சுபமான யோகமாகும். நல்ல தெய்வபக்தியும், தெய்வ நம்பிக் கையும் உடையவர்கள். எது நடந்தாலும் அது கடவுள் செயல் என்று கூறுவார்கள். அனைத்து க்குமே இவர்களுக்கு கடவுள் தான். தான் எந்த சாதனை செய்தாலும் தன்னைப் பற்றி பெருமையாக தம்பட்டம் அடித் துக் கொள்ள மாட்டார்கள். 

25. பிராம்மியம் (பிரா யோகம்):-

இதுவும் சுபமான யோகம் தான். தியானம், யோகம் ஆகியவற்றில்  நல்ல அளவில் ஈடுபாடுடையவர்கள். பிரம்ம ஞானம் அறியும் முயற்சியுடையவர்கள். ஞானிகள், யோகி கள், மகான்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதன்மூலம் நல்ல அளவில் பயன் பெறுவார்கள். விவேகத்துடன் செயல்படுவ துடன் தியாக உணர்வும், தரும சிந்தனை யும் இருக்கும். 

bairavar

26. ஐந்திரம் (ஐந் யோகம்):-

இதுவும் சுபமான யோகம் தான். இதை சிலர் மாகேந்திரம் என்ற  பெயரிலும் குறிப்பிடுவதுண்டு. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றியுடையவர்கள். தீர்க்கதரிசிகள் எனலாம். ஆழ்ந்து சிந்தனை செய் பவர்கள். வரும் பொருள் உரைப்பவர்கள். சிலர் அருள்வாக்கு, ஜோதிடம் போன்றவையும் கூட இவர்களுக்கு வரு வதுண்டு. 

27. வைதிருதி (வை யோகம்):-

இது அசுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் சுயநலவாதி களாக இருப்பார்கள். தற்பெருமையும் உடையவர்கள். கலகப் பிரியர்கள். சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கொடுப்பவர்கள். நல்லவர்கள் போல் நடித்து ஆதாயம் பெறு வார்கள். கபடம் உள்ளதுடன், கெடுக்கும் புத்தி இருக்கும். மன உறுதி இல்லாதவர்கள் என்பதால் மறைமுகமான தொல்லைகளை அளிப்பார்கள்.