ஜோதிகாவுக்கு அரசு விருது கிடைக்க வேண்டும்: பிரபல நகைச்சுவை நடிகர் ட்வீட்!

 

ஜோதிகாவுக்கு அரசு விருது கிடைக்க வேண்டும்: பிரபல நகைச்சுவை நடிகர் ட்வீட்!

நடிகை ஜோதிகாவிற்கு அரசு விருது கிடைக்க வேண்டும் என்று பிரபல நகைச்சுவை நடிகர் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

சென்னை: நடிகை ஜோதிகாவிற்கு அரசு விருது கிடைக்க வேண்டும் என்று பிரபல நகைச்சுவை நடிகர் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

சூர்யாவுடன் திருமணம் நடைபெற்ற பிறகு கடந்த 2015 முதல் மீண்டும் ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். தற்போது இவரது நடிப்பில் புதுமுக இயக்குநர் கௌதம் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராட்சசி.  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ். ஆர் பிரபு தயாரித்துள்ள இந்த படத்தில் பூர்ணிமா பாக்கிய ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படம் இன்று திரையரங்கத்தில் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு நேற்று (ஜூலை 4) பத்திரிகையாளர்களுக்கு முன்திரைடையில் செய்யப்பட்டது. அப்போது அந்த படத்தை பார்த்த விவேக் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில், ‘ராட்சஷி பார்த்தேன். ஜோதிகா அவர்களுக்கு அரசு விருது கிடைக்க வேண்டும்.வணிக சமரசம் இன்றி இப்படைப்பைக் கொடுத்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பிரபுவுக்கும் இயக்குநர் கவுதத்துக்கும் சிறப்புப் பாராட்டுக்கள். அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் தலையில் இப்படம் ஒரு கிரீடம்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.