ஜோதிகாவின் கருத்திலிருந்து பின்வாங்க போவதில்லை.. அவர் கூறியதில் தவறில்லை! நடிகர் சூர்யா

 

ஜோதிகாவின் கருத்திலிருந்து பின்வாங்க போவதில்லை.. அவர் கூறியதில் தவறில்லை! நடிகர் சூர்யா

சமீபத்தில் பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் நடிகை ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஜோதிகா, சமீபத்தில் தஞ்சாவூர் சென்றிருந்தேன்.

சமீபத்தில் பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் நடிகை ஜோதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஜோதிகா, சமீபத்தில் தஞ்சாவூர் சென்றிருந்தேன். அங்குள்ள அரசு மருத்துவமனைகளை பார்த்த போது வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு கொடுமையாக இருந்தது. ஆனால் அங்கு பிரசித்தி பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் சுத்தமாக இருக்கிறது. கோயில்களுக்கு கொட்டிக்கொடுக்கும் பணத்தை பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்று கூறினார்.  ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு சிலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் கிளம்பியது. 

r

இந்நிலையில் ஜோதிகாவுக்கு ஆதரவாக அவரது கணவரும், நடிகருமான சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கோயில்களை போல பள்ளி, மருத்துவமனைகளை உயர்வாக கருத வேண்டும் என்றுதான் ஜோதிகா கூறியிருந்தார். பள்ளிகள், மருத்துவமனைகளை இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கு செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருக்கிறோம்.தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம் முகமே தெரியாத பலர் தங்களுக்கு சார்பாக பதிலளிக்கிறார்கள்.

அறிக்கை

நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் துணை நிற்கிறார்கள்.மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதை தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தர விரும்புகிறேன்.கொரோனா பாதிப்பு காலத்தில் ஜோதிகாவுக்கு கிடைத்த ஆதரவு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. நல்ல எண்ணங்களை விதைத்து, நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்