‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல மறுத்த இஸ்லாமிய இளைஞர்கள் மீது சரமாரி தாக்குதல்!

 

‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல மறுத்த இஸ்லாமிய இளைஞர்கள் மீது சரமாரி தாக்குதல்!

ஜெய்ஸ்ரீராம் என சொல்லாத இஸ்லாமிய இளைஞர்கள் மூன்று பேர் சரமாரியாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்ல மறுத்த இஸ்லாமிய இளைஞர்கள் மீது சரமாரி தாக்குதல்!

குஜராத் : ஜெய்ஸ்ரீராம் என சொல்லாத இஸ்லாமிய இளைஞர்கள் மூன்று பேர் சரமாரியாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் கோத்ராவைச் சேர்ந்தவர்  சித்திக் பகத்.  மெக்கானிக் கடை வைத்திருக்கும் இவர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்,  ‘பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் தனது மகன் சமீர் ,சல்மான் கீதேலி, சோஹைல் பகத் ஆகியோர் கடந்த 30ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது ஆறுபேர் கொண்ட கும்பல் ஒன்று ஜெய்ஸ்ரீராம் சொல்லச் சொல்லி ஆயுதங்களால் பயங்கரமாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

இதுபற்றி வழக்குப் பதிவு செய்துள்ள கோத்ரா போலீசார், அங்கிருந்த  சிசிடிவி காட்சிகளை வைத்து  5 பேரை கைதுசெய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.