‘ஜெயில் காத்திருக்கிறது’: சாண்டி குறித்து ஜி.வி. பிரகாஷ் இயக்குநர் பதிவு! 

 

‘ஜெயில் காத்திருக்கிறது’: சாண்டி குறித்து ஜி.வி. பிரகாஷ் இயக்குநர் பதிவு! 

சாண்டி குறித்து ஜெயில் பட இயக்குநர் பதிவு வெளியிட்டுள்ளார். 

சென்னை: சாண்டி குறித்து ஜெயில் பட இயக்குநர் பதிவு வெளியிட்டுள்ளார். 

தமிழில் பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி ஐந்து வாரங்கள் ஆகி விட்டது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா ஆகியோர் வெளியேறியுள்ளனர். இதில் ரசிகர்கள் மற்றும் ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் பலரது மனதையும் கொள்ளையடித்தவர் சாண்டி மாஸ்டர். 

தனது எதார்த்தமான நகைச்சுவை தன்மை, டைமிங்கில் காமெடி அடிப்பது, கலாய்ப்பது போன்ற செயல்கள் ஹவுஸ் மேட்ஸ் எப்போதும் குதூகலமாக உள்ளனர். இந்த நிலையில் இவரை பற்றி ஜி.வி. பிரகாஷின் ஜெயில் பட இயக்குநர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ‘நடன இயக்குநர் சாண்டியை நான் அறிந்ததில்லை. ஜெயில் திரைப்படத்தில் ஒரு நடனக்காட்சி இருந்தது.
ஜீவி நடன இயக்குநராக யாரை போடப்போகிறீர்கள் என்று கேட்டார்.

பட்ஜெட்டுக்குள் யார் வருகிறார்கள் என்று பார்த்து போட வேண்டும் என்றேன்.சர்வம் தாள மையம் திரைப்படத்தில் சாண்டி திறமையாக நடனக்காட்சிகள் அமைத்தார் என்று பரிந்துரை செய்தார்.இசையமைப்பாளரைத் தாண்டி இப்ப ஹீரோ வேற..,அவர் சொல் தட்ட முடியுமா.உடனே சாண்டியிடம் பேசுங்கள் என்று என் தயாரிப்பு மேலாளரிடம் கூறினேன்.நம் பட்ஜெட்டுக்குள் வருவாரா என்று கேட்கச்சொன்னேன். சாண்டி எந்த நிபந்தனையின்றி எங்கள் பட்ஜெட்டிற்குள் எல்லாவற்றுக்கும் சம்மதித்தார்.படப்பிடிப்புக்கு முன் இரண்டு முறை சந்தித்தேன்.

நடனக்காட்சியை விவரித்தேன். அமைதியாக பதிலுரைத்தார்.படப்பிடிப்பிலும் அமைதியாக தன் வேலையை பார்த்து கொண்டிருப்பார். நான் தான் அதிகம் கத்திக்கொண்டு இருந்தேன்.அந்த நாட்களில் எனக்கு அவரை பற்றி எந்த மதிப்பீடும் உருவாகவில்லை. இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் போது எத்தனை ஜனரஞ்சகமான கலைஞன் என்று தோன்றுகிறது.வாழ்த்துகள் சாண்டி. வென்று வாருங்கள்.ஜெயில் காத்திருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.