‘ஜெயிலுக்கு போனா சோறு கிடைக்கும்’ : வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்..!

 

‘ஜெயிலுக்கு போனா சோறு கிடைக்கும்’ : வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்..!

ஈரோடு மாவட்டம் ரயில் நிலையங்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், வெடிகுண்டு வைத்திருப்பதாக செல்போன் அழைப்பு வந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் ரயில் நிலையங்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், வெடிகுண்டு வைத்திருப்பதாக செல்போன் ஒன்று  அழைப்பு வந்துள்ளது. அதனால், ரயில் நிலையம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அன்று அங்கு எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்று கண்டுபிடிப்பதற்காக காவல்துறையினர் அந்த செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்துள்ளனர்.

Bomb

அதில், அந்த செல்போன் காணாமல் போகியுள்ளதாகவும் அந்த எண்ணைப் பயன்படுத்தி வேறு யாரோ பேசியுள்ளனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து, தீவிர விசாரணைக்குப் பின்னர் போதையில் சந்தோஷ் என்ற நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை கண்டுபிடித்த காவல்துறையினர் அவனைக் கைது செய்துள்ளனர். 

Railway station

சந்தோஷிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில் அவன் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் சந்தோஷ், அவருக்கு இரண்டு திருமணம் ஆகியும் இரண்டு மனைவிகளும் தன்னுடன் இல்லை என்றும் ரைஸ் மில்லில் வேலை பார்த்து வந்த சந்தோஷுக்கு வேலைச் சுமை அதிகமாக இருந்ததால் வேலையை விட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

Santhosh

அதனால், சாப்பிடவே மிகவும் கஷ்டப் பட்டு வந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் சிறையில் அடைத்து உணவு தருவார்கள் என்று எண்ணி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும்  சந்தோஷ் வாக்கு மூலம் அளித்துள்ளார். சந்தோஷ் எண்ணிய படியே, காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.