ஜெயிலுக்குள் இருந்தே வெறித்தன வேட்டைக்கு தயாராகும் சசிகலா… அடங்காத அரசியல் வெறி..!

 

ஜெயிலுக்குள் இருந்தே வெறித்தன வேட்டைக்கு தயாராகும் சசிகலா… அடங்காத அரசியல் வெறி..!

புது கட்சியை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது சசிகலாவின் எண்ணம். அதற்கு செயல்வடிவம் கொடுத்து கொண்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன்.

ஒற்றை தலைமை கோஷத்துக்கு பிறகு அதிமுக ஆட்டம் கான ஆரம்பித்து இருக்கிறது. அதை இப்போதைக்கு பேசி சரியாக்கி சமாளித்து வருகிறார்கள். sasikala

ஆனாலும் விரிசல் விழுந்த கண்ணாடியாகத்தான் அந்த விவகாரம் இருக்கிறது.  சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புதான் அதிமுகவின் தற்போதைய முக்கிய அஜெண்டா.  பெரிய அளவில் ஏதாவது செய்தாவது ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம்.

 edappadi

இரண்டாவது அஜென்டாதான் அதிமுக பொதுக்குழு. அதில் யாருடைய  ஊடுருவலும் இல்லாமல் ஜெயிக்க இரட்டை தலைமை பக்கவாக ஸ்கெட்ச் போட்டு இருக்கிறது. அதில் தன் ஆட்களை வைத்து கலகத்தை ஏற்படுத்தி மீண்டும் ஒற்றை தலைமை, அதுவும் தனது தலைமை ஏற்கும் அளவுக்கு அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சசிகலா தரப்பு முயற்சித்து வருகிறது.  அதற்கு அவர் விடுதலையாக வேண்டும் என்பது வேறு விஷயம்.ttv

அவர் விடுதலையாகி வரும்போது அப்பதவி அவருக்காக காத்திருக்க வேண்டும் என்பது டி.டி.வி.தினகரனுக்கு தரப்புக்கு தரப்பட்டுள்ள அசைன்மென்ட்.  பிறகு அதிமுகவை உடைத்து, ஆட்சியை கைப்பற்றினால்தான் எதிர்காலத்தில் தேர்தலில் வெற்றி பெற முடியும். புது கட்சியை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது சசிகலாவின் எண்ணம். அதற்கு செயல்வடிவம் கொடுத்து கொண்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன்.