ஜெயலலிதா மரண விசாரணை: நேரில் ஆஜராக ஓபிஎஸ்.க்கு ஆணையம் சம்மன்

 

ஜெயலலிதா மரண விசாரணை: நேரில் ஆஜராக ஓபிஎஸ்.க்கு ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் உள்ளிட்டோரிடம் அந்த ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

arumugasamy

இவர்கள் தவிர, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு மருத்துவர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்ளிட்ட 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், வருகின்ற 23ம் தேதி விசாரணை ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி விளக்க அளிக்குமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

அதேபோல், அமைச்சர் விஜயபாஸ்கர் ஜனவரி 21ஆம் தேதியும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. ஜனவரி 22ஆம் தேதியும் ஆஜராக வேண்டும் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.