ஜெயலலிதா மரணம் தொடர்பான சி.வி.சண்முகத்தின் கருத்திற்கு ஓ.பி.எஸ் பதில்

 

ஜெயலலிதா மரணம் தொடர்பான சி.வி.சண்முகத்தின் கருத்திற்கு ஓ.பி.எஸ் பதில்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய கருத்துகள் அவரின் சொந்த கருத்துகள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய கருத்துகள் அவரின் சொந்த கருத்துகள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது மரணம் தொடர்பாக சந்தேக வழக்கு பதிவு செய்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். 

shanmugam

சி.வி.சண்முகம் இவ்வாறு பேசிய சில மணி நேரங்களில், முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதேபோல், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரும், “ஜெயலலிதா மரண விவகாரத்தில் கொடுக்கவேண்டிய விதத்தில் சிலருக்கு போலீஸ் ட்ரீட்மெண்ட் கொடுத்தால், தானாக உண்மை வெளிவரும்” என பேசியிருந்தார். 

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ், “ஜெயலலிதா மரணம் பற்றிய அமைச்சர் சண்முகத்தின் கருத்தை அவரது தனிப்பட்ட கருத்தாகவே கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார். 

மேலும், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெறும் என்றும் ஓ.பி.எஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.