ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு கால அவகாசம் தேவை: ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

 

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு கால அவகாசம் தேவை: ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் கேட்டு தமிழக அரசிடம் விசாரணை ஆணையம் சார்பில் கடிதம் அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் கேட்டு தமிழக அரசிடம் விசாரணை ஆணையம் சார்பில் கடிதம் அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை கடந்த 2017 செப்டம்பர் 25-ஆம் தேதி தமிழக அரசு அமைத்தது.

இதுகுறித்து, அப்போது வெளியிட்ட அரசாணையில், இந்த ஆணையம் 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, முதன்முறையாக 6 மாதங்களும், இரண்டாவது முறையாக 4 மாதங்களும் விசாரணை ஆணையம் கால அவகாசம் கோரியது. 

இதற்கிடையே, இதுவரை எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட 105 பேரிடம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், தமிழக அரசிடம் மேலும் 3 மாத கால அவகாசம் கோர ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கடிதத்தை தமிழக அரசுக்கு நாளை விசாரணை ஆணையம் அனுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.