ஜெயலலிதா மணி மண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர்

 

ஜெயலலிதா மணி மண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர்

சேலத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மணி மண்டபத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

சேலம்: சேலத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மணி மண்டபத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

சேலம் அண்ணா பூங்காவில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா ஆகியோருக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 29-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மணிமண்டபம் கட்டும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து அதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. இவ்விழாவில் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.

மேலும், சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியனூர் மற்றும் மகுடஞ்சாவடியில் விபத்துகளை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.அதன்படி அரியனூர் மற்றும் மகுடஞ்சாவடியில் மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு மகுடஞ்சாவடியில் இன்று பிற்பகல் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அடிக்கல் நாட்ட இருக்கிறார்.