ஜெயலலிதா சிலை தொடர்பாக ஈரோட்டில் திமுகவினர் வாக்குவாதம்!

 

ஜெயலலிதா சிலை தொடர்பாக ஈரோட்டில் திமுகவினர் வாக்குவாதம்!

திமுகவினருக்கு முன்னரே அந்த இடத்தில் சிலைவைக்க அதிமுகவினர் அனுமதி கேட்டதாக போலீசார் பேச்சுவார்த்தையின்போது விளக்கியதால், திமுகவினர் கலைந்து சென்றனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அங்கு ஜெயலலிதாவின் சிலை அமைக்கப்பட்டது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் கருணாநிதி சிலை வைக்க தி.மு.க.வினர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்தநிலையில், அதே இடத்தில் ஜெயலலிதா சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.கவினர் மேற்கொண்டனர். இதனால், ஆத்திரமடைந்த திமுகவினர் நள்ளிரவில் அங்கு கருணாநிதி சிலையுடன் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Statue installed

திமுகவினருக்கு முன்னரே அந்த இடத்தில் சிலைவைக்க அதிமுகவினர் அனுமதி கேட்டதாக போலீசார் பேச்சுவார்த்தையின்போது விளக்கியதால், திமுகவினர் கலைந்து சென்றனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் அங்கு ஜெயலலிதாவின் சிலை அமைக்கப்பட்டது. கருணாநிதி சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக சட்டரீதியாக அணுக உள்ளதாக தி.மு.க.வினர் தெரிவித்தனர்.