ஜெயலலிதா எங்கே..? பதறிப்போன எடப்பாடி பழனிசாமி..!

 

ஜெயலலிதா எங்கே..? பதறிப்போன எடப்பாடி பழனிசாமி..!

முதல்வர் பதறிப்போன எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா எங்கே என விழா ஏற்பாட்டாளர்களைக் கூப்பிட்டு, கேட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். பல்கலைகழகம் சார்பாக சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்தார் ஏ.சி.சண்முகம்.

edappadi

இதற்கான விழா சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது. அப்போது விழா மேடையில் ஒரு பக்கம் எம்.ஜி.ஆர் படமும், இன்னொரு பக்கம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி படமும் தான் இருந்தது. அதைப் பார்த்த முதல்வர் பதறிப்போன எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் புகைப்படம் எங்கே என விழா ஏற்பாட்டாளர்களைக் கூப்பிட்டு, கேட்டிருக்கிறார். 

edappadi

இந்தக் கேள்வியை எதிர்பாராத விழா ஏற்பாட்டாளர்கள் என்ன என்ன சொல்வதென்றே தெரியாமல் சமாளித்துள்ளனர். ஒருவழியாக எம்.ஜி.ஆர்., பெயரில் பல்கலை இருப்பதால் அவரோட படத்தை மட்டும் போட்டிருக்கிறோம். மற்றபடி இதில் எந்த உள்நோக்கமும் இல்லை எனச் சொல்லி சமாளித்து இருக்கிறார்கள்.