ஜெயலலிதா இருந்திருந்தால் கண்டிப்பாக எனக்கு அமைச்சர் கொடுத்திருப்பார் : கருணாஸ் உறுதி!

 

ஜெயலலிதா இருந்திருந்தால் கண்டிப்பாக எனக்கு அமைச்சர் கொடுத்திருப்பார் : கருணாஸ் உறுதி!

மணிகண்டன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம்  நான் தான்

ஜெயலலிதா இருந்திருந்தால் கண்டிப்பாக எனக்கு அமைச்சர் கொடுத்திருப்பார் : கருணாஸ் உறுதி!

சென்னை:  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்து பேட்டி அளித்த தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தமிழக அமைச்சரவையிலிருந்து சமீபத்தில்  நீக்கம் செய்யப்பட்டார். முதல்வர் பழனிசாமி பரிந்துரையை ஏற்று அமைச்சரவையிலிருந்து மணிகண்டனை விடுவித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.  குறிப்பாக மணிகண்டன் திமுக பக்கம் சாய்ந்ததாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ. கருணாஸ், ‘ நான் தான் மணிகண்டன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம். முதன் முதலில் அவர் குறித்து நான் தான் முதல்வரிடம் புகார் அளித்தேன்.ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் எனக்குக் கண்டிப்பாக அமைச்சர் பதவி கிடைத்திருக்கும்’ என்றார்.