ஜெயலலிதாவை மிஞ்சிய கெஜ்ரிவால்.. இனி பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்

 

ஜெயலலிதாவை மிஞ்சிய கெஜ்ரிவால்.. இனி பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்

பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் இனி இலவசமாக பயணிக்கலாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடியாய் அறிவித்திருக்கிறார்.

arvind kejriwal

பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்கள் இனி இலவசமாக பயணிக்கலாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடியாய் அறிவித்திருக்கிறார். இத்திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். தற்பொழுது தினமும் டெல்லியில் 8.4 லட்சம் பெண்கள் அரசு பேருந்தை பயணத்திற்காக பயன்படுத்துகிறார்கள். 
பெண்களுக்கு அரசு பேருந்துகளிலும், மெட்ரோவிலும் இலவச சேவை வழங்குவதன் மூலமான செலவை டெல்லி அரசே ஏற்கும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார். இந்த இலவச பயணத்தை விரும்பாத பெண்கள், அரசு பேருந்துகளிலும், மெட்ரோவிலும் டிக்கெட் வாங்கியும் பயணிக்கலாம் என்று அறிவித்திருக்கிறார்.