ஜெயலலிதாவின் ஆவி ஸ்டாலினை சும்மா விடாது! சுத்தி சுத்தி வந்து பழி வாங்கும்- முதலமைச்சர் பழனிசாமி

 

ஜெயலலிதாவின் ஆவி ஸ்டாலினை சும்மா விடாது! சுத்தி சுத்தி வந்து பழி வாங்கும்- முதலமைச்சர் பழனிசாமி

ஜெயலலிதா மரணத்தில்  மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மரணத்தில்  மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட முன்னீர்பள்ளத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து பரப்புரையை மேற்கொண்டார்.  அப்போது பேசிய அவர்,  “வழக்கு மேல் வழக்கு போட்டு ஜெயலலிதா சிறை செல்ல காரணமானது திமுக. கலைஞரும், ஸ்டாலினும் கொடுத்த நெருக்கடிகளால்தான் ஜெயலலிதா உடல்நலமுற்று இறந்தார். ஆனால் இப்போது ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். அம்மாவின் ஆன்மா ஸ்டாலினை சும்மா விடாது, சுத்தி வந்து பழி வாங்கும். சிறையில் இருக்கும் சிதம்பரம் அவர்களும் அம்மா சிறை செல்ல காரணமாக இருந்துள்ளார், பொய் வழக்கு போட அவரும் காரணமாக இருந்ததால் தான் தற்போது அம்மாவின் ஆன்மாவால் அவர் சிறையில் இருக்கிறார். ரவுடியிசத்தின் அடையாளம் ஸ்டாலின்.

EPS

நாட்டுக்கு துரோகம் விளைவிக்கும் ஒரே கட்சி திமுக அதன் தலைவர் மு.க.ஸ்டாலின், நல்லது செஞ்சா, நல்லது நடக்கும், கெட்டது செஞ்சா கெட்டது நடக்கும். உப்பை தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்” என்று கூறினார்.