ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சில் ரூ.8 லட்சம் மோசடி செய்த வெங்காய லாரி டிரைவர்!

 

ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சில் ரூ.8 லட்சம் மோசடி செய்த வெங்காய லாரி டிரைவர்!

வெங்காயம் விற்பனை செய்வதாகக் கூறி ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரிடம் ரூ. 8 லட்சம் மோசடி செய்த லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வெங்காயம் விற்பனை செய்வதாகக் கூறி ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரிடம் ரூ. 8 லட்சம் மோசடி செய்த லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ttn

சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணையில் பிரம்மாண்ட விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ். இதன் உரிமையாளரின் மகன் சுந்தர லிங்கம் கடந்த அக்டோபர் மாதம் நாசிக்கில் இருந்து ரூ.8 லட்சத்துக்கு வெங்காயம் இறக்குமதி செய்துள்ளார்.
இதற்கான பில்லை லாரி டிரைவரிடமே கொடுத்து அனுப்பியுள்ளார் நாசிக்கைச் சேர்ந்த வெங்காய உரிமையாளர். ஆனால், சென்னை வந்த டிரைவர் போலியாக பில் தயார் செய்து ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் சுந்தர லிங்கத்திடம் ஒப்படைத்துள்ளார். அவரும் அந்த பில்லில் குறிப்பிட்டிருந்த வங்கிக் கணக்கில் ரூ. 8 லட்சத்தை டெபாசிட் செய்துள்ளார். 

ttn

வெங்காயம் வாங்கி சில மாதங்கள் ஆன நிலையில் இன்னும் பணம் வரவில்லையே என்று நாசிக்கைச் சார்ந்த வியாபாரி சுந்தர லிங்கத்தைத் தொடர்புகொண்டு கேட்டுள்ளார். அப்போது, ஏற்கனவே பணம் செலுத்திவிட்டோமே என்று சுந்தர லிங்கம் கூறியுள்ளார். ஆனால், தன்னுடைய வங்கிக் கணக்குக்கு பணம் வரவில்லை என்று கூறி, பில் காப்பி, வங்கி கணக்கு உள்ளிட்டவற்றை காட்டியுள்ளார்.
அப்போதுதான் லாரி டிரைவர் போலியாக பில் கொடுத்து, ரூ.8 லட்சம் ஏமாற்றியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லாரி டிரைவர் பிரகாஷ் மீது போலீசில் புகார் செய்தார். வழக்கை பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.