ஜெயக்குமார் கருவாட்டுத்துறை அமைச்சராக மாறிவிட்டார்: தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி

 

ஜெயக்குமார் கருவாட்டுத்துறை அமைச்சராக மாறிவிட்டார்: தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருவாட்டுத்துறை அமைச்சராக மாறிவிட்டார் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

நெல்லை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருவாட்டுத்துறை அமைச்சராக மாறிவிட்டார் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் ஆடியோ தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ஆடியோவில் இருப்பது என குரல் இல்லை என ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கும் அவர் உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலாவால்தான் ஜெயக்குமார் மீன்வளத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால், இன்று அவர் கருவாட்டுத் துறை அமைச்சராக மாறி நிற்கிறார். ஜெயக்குமார் விஷயத்தில் சீக்கிரமே உண்மை வெளியில் வரும் என்றார்.