ஜெயக்குமார் ஆடியோ; உப்பு தின்னவன் தண்ணி குடிச்சுதான் ஆகனும்: டிடிவி விமர்சனம்

 

ஜெயக்குமார் ஆடியோ; உப்பு தின்னவன் தண்ணி குடிச்சுதான் ஆகனும்: டிடிவி விமர்சனம்

அமைச்சர் ஜெயக்குமார் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது உப்பு சாப்பிட்டவன் தண்ணீர் குடிச்சு ஆகனும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது உப்பு சாப்பிட்டவன் தண்ணீர் குடிச்சு ஆகனும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பெண் ஒருவரை கர்ப்பமாக்கியதாகவும், அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் ஆடியோவும், பிறப்பு சான்றிதழும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த ஆடியோ குறித்தும், பிறப்பு சான்றிதழ் குறித்து ஜெயக்குமார் விளக்கமளிக்காமல் இருந்து வருகிறார். மேலும் ஜெயக்குமாரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயக்குமார் பேசியதாக வெளியாகி இருக்கும் ஆடியோ குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், அமைச்சர் ஜெயக்குமார் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது உப்பு சாப்பிட்டவன் தண்ணீர் குடிச்சு ஆகனும் என்றார்.