ஜெட் வேகத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த சிம்பு!
நடிகர் சிம்பு நடித்துவரும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நடிகர் சிம்பு நடித்துவரும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், இயக்குநர், இசையமைப்பாளர் என்று ஆல் ரவுண்டராக வலம் வருபவர் சிம்பு. சிறு வயதிலே சினிமாவில் எண்ட்ரி கொடுத்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் மாநாடு படத்தில் நடிப்பதற்காக வெளிநாட்டுக்குச் சென்று தனது உடை இடையைப் பாதியாக குறைத்து மிகவும் ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார்.
இதற்கிடையில் அவர் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்கில், நடிகர் கவுதம் கார்த்திக்’வுடன் நடித்து வருகிறார். இந்தநிலையில் சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
Wishing you all a super awesome day!!
Stay cool ?
Remember to smile ? pic.twitter.com/TPla4qpXMW— Gautham Karthik (@Gautham_Karthik) June 29, 2019
தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக நடிகர் கவுதம் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கும் நேரம் இது. எங்கள் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.