ஜெகன்மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்தியவர் யார் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்திய நபர் வழங்கியுள்ள வாக்குமூலம் குறித்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
விசாகப்பட்டினம்: ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் நடத்திய நபர் வழங்கியுள்ள வாக்குமூலம் குறித்து பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு செல்வதற்காக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று காலை விசாகப்பட்டினம் விமான நிலையம் வந்திருந்தார்.
அப்போது செல்ஃபி எடுப்பது போல் அவரை நெருங்கிய நபர் ஒருவர், தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதம் கொண்டு ஜெகன் மோகன் ரெட்டியை குத்தினார். உடனடியாக அந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்த பாதுகாப்பு போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த நபர் பெயர் ஸ்ரீநிவாஸ் என்றும், அவர் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் கட்சியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், ஸ்ரீநிவாஸிடம் தங்களுக்கே உரிய பாணியில் விசாரணை நடத்தியுள்ளனர்.
Airport entry pass of man who attacked #jaganmohanreddy at #VishakhapatnamAirport @htTweets pic.twitter.com/5WwVUSLJdT
— Faizan Haidar (@FaiHaider) October 25, 2018
அப்போது அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், “ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் ஆக வேண்டும் என்பதே என் ஆசை. இதுபோல், அவரை கத்தியால் குத்தினால் அவர் மீது அனுதாபப்பட்டு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்பதற்காகவே இதை செய்தேன்” என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
What kind of security do you provide to Opposition Leader?!?!
This is very awful and cheap act.
Without a doubt, it’s a planned attemptive murder.AP govt must answer. #JaganMohanReddy #JaganAttacked #JaganMohanReddyAttacked #YSJaganAttacked @PMOIndia @HMOIndia pic.twitter.com/qKbbBitfSZ
— #Hyderabadi (@TheHydChap) October 25, 2018
To everyone worried about my safety – I’d like to inform you that I am safe. God’s grace and the love, concern & blessings of the people of Andhra Pradesh will protect me. Such cowardice acts will not dissuade me but only strengthen my resolve to work for the people of my state!
— YS Jagan Mohan Reddy (@ysjagan) October 25, 2018
இதற்கிடையே, மக்கள் பணி செய்வதில் இருந்து என்னை இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல் தடுத்து விடாது. நான் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன். நான் இப்போது நலமாக உள்ளேன். என் மீது அக்கறை வைத்துள்ளவர்கள் அச்சப்பட வேண்டாம் என தன் ட்விட்டர் பக்கத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.