ஜூலை 1ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ தேர்வுகள்

 

ஜூலை 1ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ தேர்வுகள்

கொரோனா முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஆண்டு இறுதி தேர்வு இல்லாமல் பாஸ் செய்தற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டார்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை ஆண்டு இறுதி தேர்வு இல்லாமல் பாஸ் செய்தற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டார். ஒன்பதாவது மற்றும் பதினொறாவது படிக்கும் மாணவர்களை, இந்த கல்வி ஆண்டு நடைபெற்ற பருவ தேர்வுகள் முடிவுகளின் படி அடுத்த வகுப்புகளுக்கு பாஸ் செய்யவும் உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பினர் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ttn

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தேர்வு நடத்த இயலாததால் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும்” என தெரிவித்தார்.