ஜி.வி.பிரகாஷுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்த நிகிஷா படேல்

 

ஜி.வி.பிரகாஷுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்த நிகிஷா படேல்

நடிகை நிகிஷா படேல் இயக்குநர் எழில் இயக்கவுள்ள புதிய படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: நடிகை நிகிஷா படேல் இயக்குநர் எழில் இயக்கவுள்ள புதிய படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

தமிழில் நாரதன், 7 நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நிகிஷா படேல். கடைசியாக அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் கொஞ்சநேரம் வந்தாலும் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்துள்ளார். 

இவர் தற்போது எழில் இயக்கவுள்ள புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக  நடிக்கவுள்ளார். பொதுவாக எழில் படத்தில் ஹீரோவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஹீரோயினுக்கும் இருக்கும் என்பதால் இப்படத்திற்குப் பிறகு தமிழில் நிகிஷா படேல் அனைவரின் கவனத்தையும் பெறுவார் என்றே கருதப்படுகிறது. 

இப்படம் பற்றி நிகிஷா படேல் கூறுகையில், ‘இப்படத்தில் நான் ஐடி நிறுவன ஊழியராக நடிக்கிறேன். முதல் நாள் படப்பிடிப்பில் ஜிவி பிரகாஷுடன் யோகா செய்யும் காட்சி படமாக்கட்டது. எழில் சாருடைய படங்கள் எப்போதுமே குடும்பத்துடன் ரசிக்கும் அளவுக்கும் இருக்கும். பிரச்சினைகளை மறந்து சிரித்துக் கொண்டே இருக்கலாம். எழில் சாரை பல தருணங்களில் சந்தித்து, எத்தனையோ கதைகள் பற்றி பேசியுள்ளோம். ஆனால் எனக்கு இந்த கேரக்டர் தான் எனக்கு ரொம்ப பிடித்தது. 

இந்த கதை மீது எழில் சார் சிறப்பான பார்வை கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் நாங்கள் ஒன்றாகப் பணியாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி. இன்னும் நிறைய படங்களில் அவருடன் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.