‘ஜி.பி.முத்து தான் என் தலைவன்’.. டிக் டாக் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்த காதல் மன்னன்… வெளுத்து வாங்கிய போலீசார்!

 

‘ஜி.பி.முத்து தான் என் தலைவன்’.. டிக் டாக் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்த காதல் மன்னன்… வெளுத்து வாங்கிய போலீசார்!

டிக் டாக் மூலம்  இளைஞர்கள் விரித்த காதல் வலையில் சிக்கி வீதிக்கு வந்த பெண்களின் கதையும் உண்டு.

டிக் டாக்கின் மாய வலையில் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் விழுந்து விடுகின்றனர்.  அதில் லைக்ஸ் வாங்குவதற்காக எந்த எல்லைக்கும் போகத் துணிந்த இந்த டிக் டாக் வாசிகளில் பலர் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கின்றனர். குறிப்பாக இந்த டிக் டாக் மூலம்  இளைஞர்கள் விரித்த காதல் வலையில் சிக்கி வீதிக்கு வந்த பெண்களின் கதையும் உண்டு. இதே போல, தென்காசியைச் சேர்ந்த காதல் மன்னன் வீசிய வலையில் திருமணம் ஆன பெண்கள் உட்படச் சிக்கித் தவித்துள்ளனர்… 

ttn

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கே.பிஅருணாசலபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் டிக் டாக்கில் ‘காதல் மன்னன் கண்ணன்’ என்ற பெயரில் ஐடி ஆரம்பித்து வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இவர் சிங்கிள் ஆக வீடியோ வெளியயிட்ட போதெல்லாம் வராத லைக்ஸ், இவர் பெண்களுடன் டிக் டாக் செய்த போது லைக்ஸ், கமெண்ட் எனத் தெறிக்கவிட்டதாம். அதனால், பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து பெண்களுடன் டிக் டாக் செய்துள்ளார் இந்த காதல் மன்னன். இவர் திருமணம் ஆன பெண்களைக் கூட விட்டு வைக்கவில்லை. ஒரு கட்டத்தில் இவருக்கு ரசிகர்கள் அதிகம் ஆக, இவரை நேரில் பார்க்க விரும்பும் எல்லா பெண்களின் செல்போன் நம்பரையும் வாங்கிக் கொண்டு எல்லாரிடமும் பேசிக் கொண்டிருந்துள்ளார். 

ttn

அதன் பின்னர் தனது வேலையைக் காட்டத் தொடங்கிய கண்ணன், அவரிடம் பேசும் பெண்களின் ஆபாச புகைப்படங்களையும் வீடியோக்களையும் டிக் டாக்கில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்து போன பெண்கள் அவர் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்து வந்துள்ளனர். இதில் ஒரு திருமணம் ஆன பெண் மட்டும் ரூ.2 லட்சம் வரை கண்ணனிடம் பணம் கொடுத்துள்ளார். அனைத்து பெண்களிடமும் சேர்த்து இவர் மொத்தமாக ரூ.40 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார். 

ttn

இதனையடுத்து ஒரு திருமணம் ஆன பெண்ணும் பள்ளி மாணவியும் தென்காசி காவல் கண்காணிப்பாளரிடம் இதனைப் பற்றி புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், கண்ணனைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர், டிக் டாக்கில் காதலுக்காக அலையும் பெண்களுக்குத் தான் நான் வலை விரித்தேன் என்றும் என் தலைவர் ஜி.பி.முத்து தான் என்றும் கூறியுள்ளார். இதனால் கடுப்பான போலீசார், கண்ணனை அடி வெளுத்துள்ளனர். பல பெண்களைக் கதறவைத்த காதல் மன்னன் இப்போது, லாக்கப்பில் கதறிக் கொண்டிருக்கிறார்.. !