ஜி.கே.வாசன் இப்படிச் செய்து விட்டாரே… நெகிழும் நிர்வாகிகள்..!

 

ஜி.கே.வாசன் இப்படிச் செய்து விட்டாரே… நெகிழும் நிர்வாகிகள்..!

அரசியல்வாதியாக இருந்தாலும் ஊழல், வன்முறை என எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர். தொண்டர்களை அரவணைத்து செல்பவர்.

பொதுவாக கட்சித் தலைவர்கள் டொனேசன் வாங்கியோ, வேறு வகையில் வசூலித்தோ, நிர்வாகிகள் தலையில் செலவை வைத்து விட்டோதான் கூட்டம், பயணம் மேற்கொள்வார்கள். ஆனால், இந்த விஷயத்தில் தமாகா
தலைவர் ஜி.கே.வாசன் வேறுபட்டு நிற்கிறார். 

அரசியல்வாதியாக இருந்தாலும் ஊழல்,  வன்முறை என எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர். தொண்டர்களை அரவணைத்து செல்பவர். எளிமையான மனிதர். தொண்டர்கள் தம்மால் சிரமப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கக்கூடியவர்.

 G.K.Vasan

மதுரையில் சமீபத்தில் த.மா.கா., தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியில் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.  கூட்டத்தில், மதிய உணவுக்கான செலவை, ஜி.கே.வாசனே கொடுத்து விட்டார். கூட்டம் முடிய மாலை ஆகிவிட்டது. எல்லாரும் போனதும், மாவட்ட நிர்வாகிகள்  50க்கும் மேற்பட்டவர்கள் ஜி.கே.வாசனை வழியனுப்ப காத்திருந்தார்கள். தமாகா  கட்சியின் மதுரை மாவட்ட நிர்வாகி சேதுராமன் நடத்தும் ஓட்டலுக்கு ஜி.கே. வாசன் போயிருக்கிறார். அங்கே எல்லாரும் சேர்ந்து டிபன் சாப்பிட்டிருக்கிறார்கள்.  மாவட்ட தலைவர் எவ்வளவோ மறுத்தும், பில் பணத்தை கட்டிவிட்டு தான் வாசன் கிளம்பியிருக்கிறார்.