ஜிவி-யின் பாடலை கேட்டு மெர்சிலிர்த்து போனேன்: நடிகர் சூர்யா பாராட்டு!
நடிகர் சூர்யா தனது 38வது திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை: நடிகர் சூர்யா தனது 38வது திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து கூறியுள்ளார்.
நடிகை சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்திற்குப் பிறகு சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே திரைப்படமும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதில் என்ஜிகே திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என்றும் காப்பான் திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கான பாடல்களை இசையமைத்து முடித்துள்ளார்.
இந்நிலையில் சூர்யாவின் 38வது திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்த பாடல்களை கேட்டுவிட்டு மனம் நெகிழ்ந்த, சூர்யா அவருக்குப் பூங்கொத்து மற்றும் அதனுடன் வாழ்த்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதில், ‘சூர்யா-38’ இசையை கேட்டு மெய் சிலிர்த்துப்போனதாக ஜி.வி.பிரகாஷுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
Thanks a lot @Suriya_offl sir for the lovely flowers and ur hand written note … means a lot … this album will be special for our whole team #suriya38 #GV70 #sudhakongra @2D_ENTPVTLTD @rajsekarpandian pic.twitter.com/dKzlugk3My
— G.V.Prakash Kumar (@gvprakash) March 28, 2019
இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜி.வி பிரகாஷ், பூக்களுக்கும், வாழ்த்து செய்திக்கும் நன்றி, ‘சூர்யா 38′ பாடல் நம் குழுவுக்குச் சிறப்பான ஒன்றாக இருக்கும்’ என்று பதிவிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்க: பத்திரிகையாளரை கன்னத்தில் அறைந்த பிரபல தெலுங்கு நடிகர்!-வீடியோ