ஜியோவை காலி செய்த பி.எஸ்.என்.எல் அறிவிப்பு! அலைமோதும் வாடிக்கையாளர்கள்!

 

ஜியோவை காலி செய்த பி.எஸ்.என்.எல் அறிவிப்பு! அலைமோதும் வாடிக்கையாளர்கள்!

செல்போன் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில் வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

செல்போன் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில் வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்து அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ஜீயோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சலுகைகளுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டவுடன் வாடிக்கையாளர்களிடையே  ஜீயோ இமாலய உயரத்திற்கு சென்றது.

jio

இப்போது பி.எஸ்.என்.எல் நிறுவனம் 455 நாட்களுக்கான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய ப்ளான்  ஒரு வருடத்திற்கானதாக இருந்தாலும் இம்மாதம் அக்டோபர் 31ம் தேதிக்குள் இந்த புதிய திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான சலுகையுடன் கூடுதலாக 90 நாட்கள் வேலிடிட்டியை வழங்கவும் முடிவு செய்திருக்கிறது பிஎஸ்.என்.எல் நிறுவனம். அதன்படி இந்த புதிய திட்டத்தில் ரீ-சார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 455 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சிறப்பு சலுகையாக அறிவித்துள்ளது. 

Jio and BSNL

1699 ரூபாய்க்கு நீங்கள் உங்களுடைய பி.எஸ்.என்.எல் நம்பருக்கு ரீசார்ஜ் செய்தால் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை தினந்தோறும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது தவிர, ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் பேசிக் கொள்ளலாம். மேலும் நாள் ஒன்றுக்கு வேலிடிட்டி முடியும் வரை 100 மெசேஜ்கள் அனுப்பிக் கொள்ளலாம். மேலும் 365 நாட்களுக்கு ரிங் பேக் டோன் அல்லது காலர் ட்யூன்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்கிறது இந்த ரிசார்ஜ் திட்டம்.