ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

 

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

டெல்லி: ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அரசியல்வாதி, பத்திரிகையாளர் என பன்முகத்தன்மை கொண்ட அவர், வயது முதிர்வு காரணமாக சமீப காலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். மேலும், உடல்நலக்குறைவாலும்  அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ஜார்ஜ் பெர்னாண்டஸ் யாருக்கும் அஞ்சாதவர், ஏழைகளின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். அச்சமற்ற, வெளிப்படையான மற்றும் தொலைநோக்குடன், அவர் நம் நாட்டிற்கு மதிப்புமிக்க பங்களிப்பை ஆற்றி உள்ளார்.  அவர் ஏழைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். 

ஜார்ஜ் பெர்னாண்டஸ் பற்றி நாம் நினைவுகூரும்போது நீதிக்காகப் போராடிய ஒரு தொழிற்சங்கத் தலைவராகவும் அவரை நாம்  நினைவில் கொள்கிறோம். எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்களை அவரது மறைவு ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.