ஜாக்குவார் காருக்கு பதிலாக பிஎம்டபிள்யூ வாங்கி தந்த அப்பா: ஆற்றில் தள்ளிவிட்ட இளைஞர்!

 

ஜாக்குவார்  காருக்கு பதிலாக பிஎம்டபிள்யூ  வாங்கி தந்த அப்பா: ஆற்றில் தள்ளிவிட்ட இளைஞர்!

பிஎம்டபிள்யூ காரை  ஆற்றுக்குள் காரை மூழ்கடிக்க முயன்ற இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜாக்குவார்  காருக்கு பதிலாக பிஎம்டபிள்யூ  வாங்கி தந்த அப்பா: ஆற்றில் தள்ளிவிட்ட இளைஞர்!

ஹரியானா: பிஎம்டபிள்யூ காரை  ஆற்றுக்குள் காரை மூழ்கடிக்க முயன்ற இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலம் யமுனா நகரைச் சேர்ந்த செல்வந்தரிடம் அவரது  மகன் விலையுயர்ந்த ஜாக்குவார் வாங்கி தர வேண்டும் என்று கேட்க, முதலில் சம்மதம் தெரிவித்த அவர் ஜாக்குவார்காரின் விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அதற்கு பதிலாக பிஎம்டபிள்யூ சொகுசு காரை பரிசாக வாங்கிக் கொடுத்தார்.

தான் கேட்ட காரை  வாங்கி தராததால் ஆத்திரமடைந்த அவரது மகன், அப்பகுதியிலிருந்த ஆற்றில் பிஎம்டபிள்யூ சொகுசு காரை விட்டுள்ளார். காரின் மதிப்பு 35 லட்சம் ரூபாயாகும்.  கரைபுரண்டு ஓடும் ஆற்றுக்குள் மிதந்து சென்ற கார், இடையில் புற்கள் நிரம்பியிருந்த இடத்தில் சிக்கிக் கொண்டது.பின்னர் இதை வீடியோவாக  எடுத்து சமூகவலைதளத்தில்  பதிவிட்டுள்ளார். பின்னர் அங்கிருந்த நீச்சல் தெரிந்த ஒருவரை வைத்து காரை மீட்கும் பணியில் இறங்கியுள்ளார்.  

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்தனர். வாழவே வழியில்லாமல் ஒருவேளை உணவுக்குக் கஷ்டப்படும் மனிதர்கள் நடமாடும் இந்த உலகில் இதுபோன்ற சிலரும் வாழத்தான் செய்கிறார்கள் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.