ஜலதோஷத்திற்கு ஊசி போட்டுக்கொண்ட குழந்தை பலி ! தவறான சிகிச்சை என போலீசில் புகார்

 

ஜலதோஷத்திற்கு ஊசி போட்டுக்கொண்ட குழந்தை பலி ! தவறான சிகிச்சை என போலீசில் புகார்

தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனையில் இறந்த குழந்தைக்கு ஒருமணிநேரமாக சிகிச்சை தருவது போல் நாடகம் ஆடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனையில் இறந்த குழந்தைக்கு ஒருமணிநேரமாக சிகிச்சை தருவது போல் நாடகம் ஆடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சாமுவேல், திவ்யா தம்பதிக்கு ஒன்றரை வயதில் எல்லோர என்ற பெண் குழந்தை உள்ளார். சாமுவேல் கப்பலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விடுமுறைக்காக மனைவி, குழந்தையை பார்க்க சாமுவேல் சொந்த ஊருக்கு வந்தார்.

baby

இந்நிலையில் குழந்தை எல்லோரா சளித்தொல்லை காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சிகிச்சை அளிப்பதற்காக செல்வ விநாயகபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்க குழந்தைக்கு மருத்துவர்கள் ஊசி போட்டதாக தெரிகிறது. ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினார்.

injection

இதுமட்டுமின்றி குழந்தை உயிரிழந்ததை தெரிவிக்காமல் கிசிச்சை அளிப்பதுபோல் ஒருமணிநேரமாக மருத்துவமனை நிர்வாகம் நாடகம் ஆடியதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து வந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விரைந்த காவல்துறையினர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். மேலும் சாமுவேல் தந்த புகாரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.