ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் குஷ்பு சுட்டுக் கொலை!

 

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் குஷ்பு சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு போலீஸ் அதிகாரி குஷ்பு ஜேன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு போலீஸ் அதிகாரி குஷ்பு ஜேன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் அவ்வப்போது நடைபெற்று வருவது தொடர்கதையாக உள்ளது. அண்மையில் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக அம்மாநிலத்தில் நடைபெற்று சம்பவங்களாலும் பதற்றம் நிலவியது.

அந்த பதற்றத்தில் இருந்து அம்மாநில மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், சிறப்பு போலீஸ் அதிகாரி குஷ்பு ஜேன் என்பவர் இன்று தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வீட்டின் வெளியே அதிகாலை 3 மணிக்கு நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் குஷ்பு பலத்த காயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அங்கு தீவிரவாதிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குஷ்பு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசார் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.