சோஷியல் டிஸ்டன்ஸை பின்பற்றி நடந்த மோடியின் அமைச்சரவைக் கூட்டம்!
Mar 25, 2020, 12:55 IST1585121107000
இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் நடந்த மோடியின் அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடந்தது. ஒவ்வொருவருக்கும் இடையே இடைவெளிவிட்டு நாற்காலிகள் போடப்பட்டு இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
நள்ளிரவு 12 மணி முதல் இந்தியா முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்த பிறகு மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை மோடியின் இல்லத்தில் கூடியது. கொரோனா கோவிட் 19 பரவுதல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தியாவில் 11 பேர் இறந்துவிட்ட நிலையில், இரவு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்ற நடவடிக்கை பற்றி மோடி அமைச்சர்களுடன் விவாதித்தார். வழக்கமாக நீள் வட்ட மேசையில் அமைந்து அமைச்சரவை கூட்டம் நடக்கும். இன்று நடந்த அமைச்சரவை கூட்டம் இடைவெளிவிட்டு அமர்ந்திருந்த படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.